டாங் வாங்கி போலீஸ் தலைமையகத்துக்கு வெளியில் சமூக ஆர்வலர்கள் கைது

adamசமூக  ஆர்வலர்கள்  இருவர்  டாங் வாங்கி  போலீஸ்  தலைமையகத்தைவிட்டு  வெளியேறும்போது  கைது செய்யப்பட்டனர்.

ஒருவர்  மாணவர்  தலைவர்  ஆடம்  அட்லி. மற்றவர்  லென்சா  கம்முனிகேசன்ஸ்  அதிகாரி  சுக்ரி  அப்ட்  ரசாப்.

சுக்ரி, தேச  நிந்தனைச்  சட்டத்தின்கீழ்  கைது  செய்யப்பட்டார். ஆனால்,  ஆடம்  எதற்காகக்  கைதானார்  என்ற  விவரம்  தெரியவில்லை.

இவ்வளவுக்கும்  அவர்களை  நிலையத்துக்கு  அழைத்தபோது    அவர்களில்  யாரும்  கைது  செய்யப்படமாட்டார்கள்  என்று  போலீஸ்  உத்தரவாதம்  அளித்திருந்ததாக அவர்களுடன்  போலீஸ்  நிலையத்துக்குச்  சென்றிருந்த  வழக்குரைஞர்  எரிக் பால்சன்  கூறினார்.