மகாதிர் 1எம்டிபி பற்றிப் பேசுவதை நிறுத்திக் கொள்ளப்போகிறாரா?

blogமுன்னாள்  பிரதமர்  டாக்டர்  மகாதிர்  முகம்மட்,  1மலேசியா  மேம்பாட்டு  நிறுவனம்  பற்றி  வலைப்பதிவில்  கருத்துரைப்பதை  நிறுத்திக்  கொள்ளக்கூடும். போலீசால்  கைது  செய்யப்படலாம்  என்ற  பயம்தான்  காரணம்.

அவ்விவகாரம்  பற்றிக்  கருத்துரைப்பதே  “குற்றமாக”ப்  பார்க்கப்படுவதால்  அதன்மீது  கருத்துரைக்கப்போவதில்லை  என்று  நேற்று  மகாதிர்  கூறியிருந்ததை  வைத்து  இனி  அவர்  அதைப்  பற்றி  எழுத  மாட்டாரா  எனச்  செய்தியாளர்கள்  வினவினார்கள்.

“தெரியவில்லை. அதைப்  பற்றி  யோசிக்க  வேண்டும்.

“போலீஸ்  என்னை  விசாரிக்கலாம். இப்போதைக்கு  என்னைச்  சிறையில்  போடுவார்கள்  என்று  நினைக்கவில்லை. ஆனால், அதற்கான  சாத்தியம்  இருக்கிறது”, என  முன்னாள்  தகவல்  அமைச்சர்  சைனுடின்  மைடின்  எழுதிய  ‘மகாதிர்  என்  நண்பர்  அல்லர்’  என்ற  நூலை  வெளியிட்ட பின்னர்  செய்தியாளர்களிடம்  பேசியபோது  மகாதிர்  குறிப்பிட்டார்.