#TangkapNajib ஆர்ப்பாட்டம்: இதுவரை 10 பேர் கைது

crackபிற்பகல்  மணி  2.30  அளவில்,  #TangkapNajib(நஜிப்பைக்  கைது  செய்) ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்ட  கிள்ளான்  எம்பி  சார்ல்ஸ்  சந்தியாகுவின்  உதவியாளர்  ஜேய்  ஜேய்  டென்னிஸ்  உள்பட சுமார்  பத்து  பேர்  கைது  செய்யப்பட்டனர்.

ஒருவர் போலீஸ்மீது  பட்டாசுகளைக்  கொளுத்திப்  போட்டதற்காகக்  கைது  செய்யப்பட்டார்.

கைது  நடவடிக்கை  அதிர்ச்சியளிப்பதாக  அங்குள்ள  வழக்குரைஞர்  எரிக்  பால்சன்  கூறினார்.

“அதிர்ச்சி அளிக்கிறது. பேரணி  இன்னும்  தொடங்கக்கூட  இல்லை. பேரணி  நடக்காமல்  தடுத்து  நிறுத்துவதற்காக போலீஸ்  இந்தக்  கைது  நடவடிக்கையை  மேற்கொண்டிருக்கிறது”, என்றவர்  மலேசியாகினியிடம்  தெரிவித்தார்.