#TangkapNajib ஆர்ப்பாட்டம் பிசுபிசுத்தது: 20 பேருக்குமேல் கைது

dang#TangkapNajib  ஆர்ப்பாட்டத்தை  அதன் ஆரம்பக்  கட்டத்திலேயே  போலீசார்  முறியடித்துள்ளனர்.

ஆர்ப்பாட்டத்தில்  கலந்துகொள்ள  வந்தவர்களில்  20 பேருக்கு  மேற்பட்டோர்  கைது  செய்யப்பட்டதாக  டாங்  வாங்கி  போலீஸ்  தலைமையகப்  பேச்சாளர்  ஒருவர்  மலேசியாகினியிடம்  தெரிவித்தார்.

இதனிடையே, போலீசார்  துவாங்கு  அப்துல் ரஹ்மான் சாலையை மூடியுள்ளனர். அங்கிருந்த  பொதுமக்களிடம்  உடனடியாக  இடத்தைக்  காலி  செய்யுமாறு  கூறப்பட்டது.  மீறுவோர்  கைது  செய்யப்படுவார்கள்  என்றும்  எச்சரிக்கப்பட்டது.

அப்பகுதியில்  சோகோவும்  மற்ற  கடைகளும்  மூடிக்  கிடக்கின்றன.