அனல் பறக்கும் குளுவாங் அம்னோ ஆண்டுக் கூட்டம்

Jpegகுளுவாங்  அம்னோ தொகுதி  ஆண்டுக் கூட்டத்தில்  அல்டான்துன்யா  கொலை  விவகாரமெல்லாம்  கிளறப்படும்  என்பதால் அது  அனல்  பறக்கும் கூட்டமாக  அமையும்  என  எதிர்பார்க்கப்படுகிறது.

அந்த  ஆண்டுக்கூட்டத்துக்கு  வருகை  புரிந்த  அம்னோ  துணைத்  தலைவர்  முகைதின்  யாசினுக்கு  சிரம்பான்,  கோத்தா  மலாக்காபோல்  அல்லாது  சிறப்பான  வரவேற்பு  கொடுக்கப்பட்டது.

சுமார்  400  பேராளர்கள்  கூடியுள்ள  அக்கூட்டத்தில்  துணைப் பிரதமர்  பதவியிலிருந்து வெளியேற்றப்பட்ட  முகைதின்  உரையாற்றுவார்.  முகைதினின்  உரை  ஆர்வத்துடன்  எதிர்பார்க்கப்படுகிறது.

அந்த  ஆண்டுக்  கூட்டத்தில் பிரதமர்  நஜிப்  அப்துல்  ரசாக்  அவர் மீது  கூறப்படும்  ஊழல்களுக்கும்  அவர்முன்  வைக்கப்படும்  கேள்விகளுக்கும்  விளக்கம்  அளிக்க  வேண்டும்  என்று கோரும்  தீர்மானமொன்றும் கொண்டுவரப்படவுள்ளது.

அத்தீர்மானம்  அல்டான்துன்யா  கொலை, 1எம்டிபி  ஊழல்,  பிகேஆரின்  பாண்டான்  எம்பி  ரபிஸி  ரம்லி  வெளிப்படுத்திய  புதிய  விஐபி அரசாங்க  ஜெட்   வினமான  விவகாரம்  ஆகியவற்றுக்குக்  கட்சித்  தலைவரின்  விளக்கத்தைக்  கோரும்.