பிரதமர்: அமைச்சரவை மாற்றம் முடிந்தது; அடுத்த வேலையைக் கவனிப்போம்

teamபிரதமர்  நஜிப்  அப்துல்  ரசாக்  அமைச்சரவை  மாற்றங்கள்  முடிந்து  விட்டன  என்பதால்  அதை  விட்டு  முன்னே  சென்று  அதைவிட  முக்கியமான  காரியங்களில்  கவனம்  செலுத்த  வேண்டும்  என்று  கூறினார்.

“மக்களின்  தேவைகளைக்  கவனிக்க  வேண்டும்”. பிரதமர் இன்று  புத்ரா  ஜெயாவில்  பிரதமர்  அலுவலகப்  பணியாளர்களின்  மாதாந்திரக்  கூட்டத்தில்  பேசினார்.

துணைப் பிரதமர் அஹ்மட் ஜாஹிட்  ஹமிடியின்மீதும்  அவரின்  ஆற்றலின்மீதும்   நம்பிக்கை  இருப்பதாக  நஜிப்  கூறினார்.

“எனக்கும்  அமைச்சரவைக்கும்  உதவும்  அவரின்  ஆற்றல்மீது  எனக்கு  நம்பிக்கை  உண்டு. இருவருமாக  சேர்ந்து  ஒரு சிறந்த  குழுவாக  விளங்குவோம்”, என்றார்.