1எம்டிபி தகவல் கசிவு தொடர்பில் எம்ஏசிசி உயர் அதிகாரியிடம் போலீஸ் விசாரணை

copsபோலீசார்  மலேசிய  ஊழல்தடுப்பு  ஆணையத்தின்  உயர்  அதிகாரி  ஒருவரை   புத்ரா  ஜெயாவில்  உள்ள  அவரது  அலுவலகத்தில்  விசாரித்து  வருகின்றனர்.

1எம்டிபி  புலனாய்வுத்  தகவல்களைக்  கசிய விட்டது  தொடர்பில்  அந்த  விசாரணை  நடைபெறுவதாக  தெரிகிறது.

புக்கிட்  அமான்  குற்றப்  புலனாய்வுத்  துறை  அதிகாரிகள்  மூவர்  பிற்பகல்  மணி  2.45க்கு  எம்ஏசிசி  தலைமையகம்  வந்தார்கள். விசாரணை  செய்யப்படும்  அதிகாரி  3.10க்கு  வந்தார்.

தகவலறிந்து  சுமார்  30  செய்தியாளர்களும்  அங்கு  சென்றனர். ஆனால்,  அவர்கள்  எம்ஏசிசி  தலைமையகத்துக்கு  வெளியில் காத்திருக்குமாறு  கேட்டுக்கொள்ளப்பட்டனர்.