1எம்டிபி மீதான பிஏசி விசாரணை தள்ளிப் போடப்பட்டது

hearingபொதுக் கணக்குக்  குழுவின்  விசாரணை  நிறுத்தி  வைக்கப்பட்டிருப்பதாகவும்  பின்னர்  அது  நடைபெறும்  என்றும்  1எம்டிபி-க்குத்  தெரிவிக்கப்பட்டுள்ளது.

“இன்று, நிதி  அமைச்சின்வழி  நாடாளுமன்ற பிஏசி  செயலாளரிடமிருந்து  2015  ஆகஸ்ட் 4, 5, 6, 17, 18  ஆகிய  நாள்களிலும்  செப்டம்பர் 8, 10-இலும்  நடைபெறவிருந்த  பிஏசி  விசாரணை  தள்ளிப்  போடப்பட்டிருப்பதாகவும்  விசாரணைக்கான  நாள்கள்  பின்னர்  முடிவு  செய்யப்படும்  என்றும்  கூறும்  அதிகாரப்பூர்வ  அறிவிக்கை  கிடைக்கப்பெற்றது.

“பிஏசிக்கு  முழு  ஒத்துழைப்பு  கொடுக்கவும் புதிய  நாள்களில்  விசாரணைக்கு  வரவும்  தயாராக  இருக்கிறோம்  என்பதை  மீண்டும்  தெரிவித்துக்  கொள்கிறோம்”, என  எம்டிபி  தெரிவித்தது.