இலங்கை கடற்படையினரின் அட்டூழியம்: கேரளாவிற்கு படையெடுக்கும் தமிழக மீனவர்கள்

fisherman_001இலங்கை கடற்படையினர் தொடர்ந்து தாக்குதல் நடத்துவதன் காரணமாக தமிழக மீனவர்களில் பெரும்பாலானோர் கேரளா கடற்பகுதிக்கு சென்றுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

நிரந்தரமான வருவாயை எதிர்ப்பார்த்தே தமிழக மீனவர்கள் கேரள கடற்பகுதிக்கு சென்றுள்ளதாக தமிழக மீனவர் சம்மேளன தலைவர் என் ஜே போஸ் தெரிவித்துள்ளார்.

இதேவேளை மீன்பிடிக்காக 667 படகுகளுக்கு அனுமதி வழங்கப்பட்ட போதும் 61 படகுகளே தொழிலுக்காக சென்றதாக தமிழக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இந்த நிலையில் இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையிலான கச்சத்தீவு உடன்படிக்கையின்படி இரண்டு நாட்டு மீனவர்களும் அதனை அண்டிய கடற்பரப்பில் மீன்பிடிக்க அனுமதியுண்டு என்பதை மீனவர் சம்மேளன தலைவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

-http://www.newindianews.com

TAGS: