ஜோகூர் எம்பி: அம்னோவால் ஊழலைப் பார்த்துக்கொண்டிருக்க முடியாது

johor mbஜோகூர்  மந்திரி  புசார்  காலிட்  நோர்டின், ஊழலைக்  கண்டு  அம்னோ வாயைப்  பொத்திக்  கொண்டிருக்கக்  கூடாது  என்று  கோரிக்கை  விடுத்திருப்பது  பலருக்கும்  வியப்பளிக்கிறது. இவ்வளவுக்கும்  அவர்  யாருடைய  பெயரையும்  குறிப்பிடவில்லை.

“அம்னோவால்,  மலாய்க்காரர்  போராட்டத்துக்கு  முன்னுரிமை  அளிக்காமல் விசுவாசம்  என்ற  பெயரில்  சில  தரப்பினரைத்  தற்காக்கக்  கட்சி  பயன்படுத்தப்படுவதைப்  பார்த்துக்கொண்டு   மெளனமாக  இருக்க  முடியாது.

“அம்னோ  முன்னோக்கிச்  செல்லவும்  முனைப்புடன்  செயல்படவும்  அதன்  செல்வாக்கை  நிலைநாட்டவும்  நேரம்  வந்து விட்டது”,  என்று  அவர் முகநூலில்  கூறியிருந்தார்.

ஊழல்  ஒரு  கலாச்சாரமாக  மாறுவதையும்  நம்பிக்கைக்குத்  துரோகம்  இழைக்கப்படுவதையும்  பார்த்துக்  கொண்டு  அம்னோ  வாயைப்  பொத்திக்  கொண்டிருக்கக்  கூடாது  என்றும்  அவர்  சொன்னார்.

கடந்த  ஞாயிற்றுக்கிழமை  பாசிர்  கூடாங்  அம்னோ  மகளிர்  ஆண்டுக்  கூட்டத்தில்  அவர்  உரையாற்றியபோது  தெரிவித்த  கருத்துகள்  அந்த  முகநூல் பதிவில் இடம்பெற்றிருந்தன.