சரவாக் ரிப்போர்ட் ஆசிரியரை கைது செய்ய ஆணை

 

சரவாக் ரிப்போர்ட் ஆசிரியர் கிளேர் ரியுகாஸல் பிரௌனை கைது செய்ய போலீஸ்   கைது ஆணை பெற்றுள்ளது. அவர் பிரதமர் நஜிப்பை Clarebrownகவிழ்ப்பதற்கான சதித்திட்டத்தில் ஓர் அங்கமாகும் என்று குற்றம் சாட்டப்பட்டு வருகிறார்.

அக்கைது ஆணை மலேசிய குற்றவியல் சட்டம் செக்சன் 124B மற்றும் செக்சன் 124Iஆகியவற்றின் கீழ் பெறப்பட்டுள்ளது.

மேலும், அவர் போலீசாரால் தேடப்படுகிறவர் என்று ஆசியானாபோல் பட்டியலிலும் இண்டர்போல் சிவப்பு அறிக்கையிலும் சேர்ப்பதற்குமான மனுக்களை  தாக்கல் செய்வதற்கான நடவடிக்கைகளை போலீஸ் மேற்கொள்ளும் என்றும் இன்று மாலை சிஐடி இயக்குனர் விடுத்த ஓர் அறிக்கையில் கூறியுள்ளார்.