அரசியல் பிணந்திண்ணி அய்யா வைக்கோ ! (அவசியம் படியுங்கள் )

contentwriting_1சசிபெருமாலின் இறந்துபோன உடலைவாங்க அய்யா வைக்கோ நேற்றுமுதல் தன்னை மறந்த நிலையில் தவம் இருந்துகொண்டு இருக்கிறார். அவர் இந்த இனத்திற்காக இரவும் பகலும் உழைப்பதை பார்க்கும் போதும், அதற்காக இன்றுவரை இந்த இனம் அவருக்கு எதுவுமே செய்யவில்லை என்று நினைக்கும் “கில்ட்டியாக” பீல் பன்னல.

சரி நாம விடயத்திற்கு வருவோம்.

2009 இல் முத்துக்குமார் இறந்துபோகிறார். முத்துக்குமார் சாம்பலை தமிழகம் முழுவதும் எடுத்துசென்று ஒரு உணர்வலையினை உருவாக்க திட்டமிட்ட போது, “தலைவர் வீட்டு வழியாக இதை கொண்டுசெல்லவெண்டாம், தலைவர் வருத்தபடுவார்” என்று சொன்ன சுபவீயை பார்த்து வைக்கோ எதுவும் சொன்னாரா ?. அங்கு எழுந்த உணர்வலைகளை அப்படியே தனதாக்கி கொள்ள நினைத்து “விதியே விதியே என் செய்ய நினைத்தாய் என் தமிழ் சாதியை” என்று முத்துக்குமார் எழுதிய தமிழ்தேசிய வரிகளில் தோற்று நின்றார். முத்துகுமாரின் பிணத்தில் அரசியல் செய்ய நினைத்து தோற்றுப்போனார்.

முள்ளிவாய்க்கால் முற்றம் வைக்கோ-நடராஜன் மற்றும் நெடுமாறன் இவர்களை கொண்டே அடிக்கல் நாட்டப்பட்டது. முள்ளிவாய்க்கால் முற்றத்தை வேலைநடக்கும் போது மாதம் ஒருமுறை சென்று பார்ப்பவர் வைக்கோ. நெடுமாறன் மற்றும் உலகதமிழர்களின் வேண்டுகோளிற்கு இணங்கவும் ஈழம் என்ற உன்னதத்திர்ககாகவும் அண்ணன் சீமான் அங்கு சென்று பார்த்தபிறகு, வைக்கோ அங்கு செல்வதை நிறுத்திக்கொண்டார். திறப்புவிழாவின் மூன்றுநாள் நிகழ்வில் முதல்நாளிலேயே அண்ணன் சீமானும், அய்யா வைக்கோவையும் பேசவைத்துவிட வேண்டும் என்று விரும்பினார் அய்யா நெடுமாறன். அண்ணன் சீமான் சம்மதித்ததும் அய்யா வைக்கோ சம்மதிக்கவில்லை. “சீமான் முதல்நாள் பேசினால், நிகழ்விற்கு வரமாட்டேன்” என்று சொல்ல அண்ணன் அடுத்த நாள் பேசினார்.

Vaiko_Karuna_AFPஅந்த நிகழ்வின் முதல்நாள் மாலைநேரே அரங்கு துவங்குவதற்கு முன்னமே வந்த அண்ணன் பார்வையாளர்களில் ஒருவராக கடைசியில் அமர்ந்து இருந்தார். இதை அறிந்துகொண்ட அய்யா நெடுமாறன், நடராஜன் எல்லாம் எவளவோ வற்ப்புறுத்தி அழைத்தும் அண்ணன் சீமான் மேடையேறவில்லை. அன்று வைக்கோ மேடையில் பேசியதை கேட்டால் தற்பெருமையின் உச்சம். உங்களில் யாருக்கேனும் அய்யா வைக்கோ அங்கு பேசியதையும் அண்ணன் சீமான் பேசியதையும் ஒப்பிட்டு பாருங்கள். பேச்சும் ஒருவகை ராணுவம் என்பதை அன்றுதான் உணர்ந்தேன். இதை உணர்ந்த தமிழக உளவுபிரிவு சீமான் பேசிய அன்று இரவே எல்லா ஒலிவாங்கிகளையும் உடைத்துவிட்டு சென்றது போலீஸ். முள்ளிவாய்க்கால் முற்றம் விழாவிற்கு வரும் வைக்கோ மதிமுக சார்பில் எந்த இடத்திலும் விளம்பர பதகையோ சுவரெழுத்தொ இல்லை. ஏனனில் ஜெயாவுடன் கூட்டணி பேச்சு இறுதி செய்யப்படாத நிலையில் அவர் எந்த முடிவையும் தஞ்சை மாவட்ட மதிமுக சார்பில் செய்ய அனுமதிக்கவில்லை என்ற உண்மையை அறிவோம். ஈழம் உயிரின் உணர்வை அரசியலாய் பார்க்கும் பிணந்திண்ணி அய்யா வைக்கோ அவர்கள்.

அடத்ததாக அய்யா நம்மாழ்வார் அவர்கள்… மீத்தேன் பிரச்சனையில் தஞ்சையில் எல்லோரையும் அரவணைத்தே சென்றவர் அய்யா நம்மாழ்வார். அய்யா வைக்கோ அவர்களுக்கும் நம்மாழ்வார் அய்யாவிற்கும் எந்த ஒரு தனிப்பட்ட பகையும் கிடையாது. அய்யா நம்மாழ்வார் இறந்து போன இறுதி சடங்கில் ஏன் வைக்கோ கலந்துகொள்ளவில்லை ? திருச்சி இளைஞர் பாசறை பேரணியை துவங்கி வைத்தவர், நாம்தமிழர் கட்சி நடத்திய குடவாசல் மீத்தேன் திட்ட எதிர்ப்பு உண்ணாவிருதத்தில் கலந்துகொண்டவர், பழனியில் நாம்தமிழர் கட்சியின் இளைஞர் பாசறை நடத்திய பயிற்சி பாசறை நிகழ்ச்சியில் கலந்துகொண்டு உரையாற்றினார். நாம்தமிழர் நிகழ்வுகளில் அய்யா நம்மாழ்வார் கலந்துகொண்டார் என்ற ஒரே காரணத்திற்க்காக வைக்கோ நம்மாழ்வாரின் இறுதி சடங்கில் கலந்துகொள்ளவில்லை. ஆனால் அவர் இறந்து போனபிறகு காவிரி டெல்ட்டா சுற்றுபயணம் என்ற பெயரில் “வாழும் நம்மாழ்வாரே” என்று தஞ்சை நகரம் முழுமைக்கும் பதாகைகளை வைத்து நம்மாழ்வாரின் தியாகத்தை அரசியல் அறுவடை செய்ய பார்த்தவர் அய்யா வைக்கோ. அதிலும் தோற்றுபோய் அவமானப்பட்டு நின்றவர் வைக்கோ.

vaikkoஅய்யா அப்துல்கலாம் இறப்பதற்கு சிலநாட்கள் முன்னதாக நரேந்திர மோடியை சந்தித்த வைக்கோ, ஆந்திராவில் இருபது பேர் படுகொலைக்கு நீதிகேட்டு போனேன். மக்களெல்லாம் உங்களை திட்டுகிறார்கள் என்று சொன்னேன் என்று வந்து புலுகினார். சரி சந்திரபாபு நாயிடு உங்களின் நெருங்கிய நண்பர், பரஸ்ப்பர குடும்ப விழாக்களில் கலந்துகொள்பவர்கள் என்ற உரிமையில் அய்யா வைக்கோ அவர்கள் நேரடியாக சந்திரபாபு நாயிடுவை சந்தித்து 20 தமிழர்கள் இறப்பிற்கு நீதிகேட்டு இருக்கலாமே ?. இறந்த 20 தமிழர்கள் பிணத்திலும் அரசியல் செய்ய நினைத்தவர் அய்யா வைக்கோ தோற்றுபோனார்.

இரண்டு நாள் முன்னதாக திட்டிய இன எதிரி மோடியை அப்துல்கலாம் அண்ணனிடம் எப்படி சிரித்துக்கொண்டே அறிமுகப்படுத்த முடிகிறது ? பாரத பிரதமர் நரந்திர மோடிக்கோ, அல்லது காங்கிரஸ் ராகுல் காந்திக்கோ கட்டாயம் மொழிபெயர்ப்பு செய்து விடயங்களை விளக்க ஆள்கள் உடன் வந்து இருப்பார்கள். அந்தவேலையை அய்யா மொடி ஏன் செய்தார் ? வழக்கம் போலவே தனது பிணம்திண்ணி அரசியலில் ஆதாயம் தேட நினைத்து அங்கேயும் தோற்றுபோனார்.

தனது மகன் ITC (Imperial Tobacco Company) ஏஜென்ட். தனது பெயரிலேயே டொபாக்கோ என்று உள்ள நிறுவனம், வைக்கோவே ஒத்துக்கொண்ட பிறகும், புகையிலை பொருள்கள் விற்பதில்லை என்று சப்பைக்கட்டு வேறு மதிமுக மக்கள். தனது மகன் போதைப்பொருள் வியாபர ஏஜென்ட், தமிழகத்தில் உள்ள 11 சாராய தொழிற்ச்சாலைகளில் 11 திமுகவினருடையது. தனது அரசியல் சுயலாபத்திற்க்காக இவர்களை பற்றி எதுவுமே பேசாத வைக்கோ சசிபெருமாலின் பெயரை சொல்வதற்கோ, அந்த நிகழ்வில் கலந்துகொள்ளவோ என்ன தகுதி இருக்கு ? முகத்திற்கு நேராக திட்டிய மோடியிடமே இரண்டுநாட்களில் சிரித்து சிரித்து பேசிய வைக்கோ எதுவுமே பேசாத என் அண்ணன் சீமானை கண்டவுடன் ஏன் எரிச்சல் அடையவேண்டும் ? இன்னொருவர் இடம்கொடுக்க எழுந்தபோது வம்படியாக அவரின் கையைப்பிடித்து அமரவைக்கவேண்டும் ? இதுவும் பிணந்தின்னி அரசியலின் நீட்சி.

நெடுங்காலமாக மது ஒழிப்பிற்காக போராடி காலத்திலேயே உயிர்விட்ட அய்யா சசிபெருமாளின் இறப்பின் தியாகத்தை ஆவமதிக்க போதைப்பொருள் விற்பனை பிரதிநிதியின் தகப்பனாரான அய்யா வைக்கோ அவர்களும், தமிழ்நாட்டில் 11 சாராய தொழிற்ச்சாலைகளை வைத்துள்ள திமுகவின் தலைமை ஸ்டாலினும் அவரின் இறுதி ஊர்வலத்தில் கலந்துகொள்கிறார்கள். வழக்கம்போலவே ஒரு தமிழனின் தியாக பிணத்தின் மீது திராவிட அரசியல் கழுகுகள் கொத்தி தின்றுகொண்டு இருக்கிறது. இதற்க்கு முதன்மையானவர் வைக்கோ.என்கிற வையாபுரி கோபாலசாமி நாய்டு.

தமிழர் எழுச்சிப்பறை