உலக மக்கள் அனைவருக்கும் விடுதலை போராட்டம் நடத்திய முதல் தமிழன், இட்லர் மன்னிப்பு கேட்ட தமிழன்

shenbagaramanஉலக மக்கள் அனைவருக்கும் விடுதலை போராட்டம் நடத்திய முதல் தமிழன், இட்லர் மன்னிப்பு கேட்ட தமிழன், உலக வரலாற்றில் மறைக்கைபட்ட தமிழன் சென்பகராமன் பிள்ளை!

மேனாடுகளில் ஒரு தன்னிகரற்ற இந்தியத் தூதுவனாகத் திகழ்ந்த முனைவர் பிள்ளைக்கு, புதிய கண்டத்திலே காத்திருந்த அதிர்ச்சிதான், அவரை ஒரு உலக வீரனாக்கியதென்று கூறலாம். சனநாயகத்தை காக்க உறுதி பூண்டு, ஐக்கிய நாடுகள் சபையிலேயே அங்கத்துவம் வகிக்கும் அமெரிக்காவில், கறுப்பு நிற மக்களான, நீக்ரோக்களுக்கு இழைக்கப்படும் பாரபட்சம், கொடுமை இவைதான் முனைவர் பிள்ளையை அதிர வைத்தன. மேனியின் நிறம் கறுப்பு என்ற ஒரே காரணத்திற்காக, கண்ணீர் வெள்ளத்திலே மிதந்த நீக்ரோக்களுக்கு நியாயம் வழங்க எவருமே அற்ற நிராதரவான நிலையைக் கண்டு கருணைமிக்க பாரம்பரியத்தைச் சேர்ந்த அந்தப் பச்சைத் தமிழன் கண் கலங்கினான். கலிபோர்னியாவுக்கு அவர் சென்றது ஒடுக்கப்பட்ட மக்களின் சங்கத்தை அமைப்பதற்காகத்தான்.

ஆனால் மக்கள், கேவலம்! புழுவிலும் கேவலமாக வாழ்கிறார்கள் என்பதை முனைவர் பிள்ளை கனவிலும் கருதவில்லை. நீக்ரோக்களுக்கு உடனடியாக நீதிபெற்றுத்தர வேண்டும் என்று துடித்த அவர் அப்போது ஆட்சியிலிருந்த அமெரிக்க சனாதிபதி திரு. வூட்ரோ வில்சனை சந்தித்தார்.

நீக்ரோக்களின் விடுதலைக்காக பாடுபட்ட ஆபிரகாம் லிங்கனுக்குப் பிறகு, மிகப் பிரபலம் வாய்ந்த அமெரிக்க சனாதிபதி திரு.வூட்ரோ வில்சன் தான், கல்லையும் உருக்கும் வண்ணம் கறுப்பு நிற மக்களின் துன்பத்தை எடுத்துக் கூறினார். முனைவர் பிள்ளை தமது சங்கத்தின் லட்சியங்களை தெளிவாக வில்சனிடம் விளக்கினார். நீண்டநேரம் தனது வாக்கு வன்மையின் பலத்தை வைத்து வாதாடினார் முனைவர் பிள்ளை. ஆனால் நீக்ரோக்களுக்கு நீதி வழங்க வேண்டும் என்பது தான் தனது நோக்கம் என்றும், எனினும் அமெரிக்க இலுமினாட்டிகள் (illuminati) தான் அன்றும் விரும்பவில்லை என்றும், மக்களின் அபிப்பிராயத்திற்கு மாறாக தன்னால் நடக்க முடியாது என்றும் கூறி சனாதிபதி வுட்ரோ வில்சன் கையை விரித்து விட்டார். உலக வங்கியை நிர்வகிக்கும்(federal reserve) இலுமிநாடிகளின் கைகூலிகலாகவே அமெரிக்க அதிபர்கள் செயல்பட்டனர். அதோடு அயர்ந்து விடவில்லை அந்த தீரமிக்க தமிழ் வீரன் செண்பகராமன்!

பேராபத்துச் சூழ்ந்தது.

நீக்ரோ மக்களுக்காக பாடு பட்ட அமெரிக்க சனாதிபதி லிங்கனையே படுகொலை செய்த பயங்கர வாதிகளுக்கிடையில்(இலுமிநாடி), தன்னந் தனியாக நின்று, தோட்டம், தோட்டமாகச் சென்று, தனியொரு சக்தியாக அடிப்படை மனித உரிமைகளைப் பற்றி பிரசாரம் செய்ய ஆரம்பித்தார் முனைவர் பிள்ளை.

ஒர் அந்நியன் வந்து, அடக்கப்பட்ட அனாதைகளுக்காகப் போராடுவதா? என்று ஆத்திரப்பட்டனர் அங்கிருந்த நிறவெறியர்களும் இலுமினாடிகளும். ஆரம்பித்தது முனைவர் பிள்ளைக்கு கடுமையான எதிர்ப்பு, ஆபத்து அவரை நிழல் போலத் தொடரத் தொடங்கியது. இலுமினாடிகள் பிள்ளையை கொல்ல சதி திட்டம் தீட்டினர்! சூட்சம புத்தி மிக்க முனைவர் செண்பகராமன் பிள்ளை நாளொரு பெயரும், பொழுதொரு வேடமுமாக அமெரிக்கா எங்கும் சுற்றித் திரிந்தார். அக்ரோசமான சொற்பொழிவுகளை நிகழ்த்தினார். இவற்றைக் கேட்டு கிளர்ந்தெழந்த நீக்ரோ மக்கள் முனைவர் பிள்ளையை, தனது இரட்சகனாகவே கருதினார்கள் என்றால் மிகையல்ல!

இந்த கட்டத்தில் இனியும் இவரை சும்மா விட்டு வைப்பது ஆபத்தெனக் கருதிய இலுமிநாடி கட்டுப்படுத்திய பிரிட்டிசு அரசாங்கம், பிரிட்டிசு காவல்துறை, ஒற்றர்களும் முனைவர் பிள்ளையை நோக்கி தமது வலையை விரித்தனர். தன் இலட்சியப் பாதையிலே வந்த, தடையை வெற்றிகரமாகத் தாண்டி, மாறு பெயரில் கடவுச்சீட்டு பெற்றுக் கொண்டு, போராட்ட விதைகளை மக்கள் மனதில் விதைத்துவிட்டு, அமெரிக்காவில் கருப்பின மக்களின் விடுதலைக்கான காலத்தையும் அமைத்துவிட்டு நாட்டைவிட்டு வெளியேறினார் பிள்ளை!

அடுத்து அவர் கால் வைத்தது இருண்ட கண்டமெனும் ஆபிரிக்காவில். அங்கும் அடக்கப்பட்ட கருப்பின மக்கள் அவலப்படுவதைக் கண்டார். இலட்சியப் பணி மேலும் புது வேகத்தோடு தொடர்ந்தது. இந்த நிலையில் ஆபிரிக்காவில் வைத்தே அவரைக் கைது செய்து விட வேண்டும் என்று, இலுமிநாடி கட்டுப்படுத்திய பிரிட்டிசு ஆட்சி முடிவு செய்தது. விளைவு? முனைவர் பிள்ளையை உயிருடனோ, பிணமாகவோ கொண்டு வருபவர்களுக்கு ஒரு லட்சம் பவுண் பரிசளிக்கப்படும் என்று பிரிட்டிசு அரசு பிரகடனப்படுத்தியது தான் தாமதம், ஒற்றர்களின் துடிப்பும், வேகமும் கரை கடந்தன. அவர்களில் ஒரு பெண் சாகசங்களில் கைதேர்ந்தவள். பெண்மையை இழிவுபடுத்தி பெண்ணை ஒரு பொருளாக மாற்றியது இலுமிநாடி. பெண்மையைப் பயன் படுத்தி, மாபெரும் சூரத்தனமான காரியங்களைச் சாதித்தவள். அவளின் பாச்சா கூட முனைவர் பிள்ளையிடம் பலிக்கவில்லை. அகமென்றும் புறமென்றும் வாழ்வியலை வகுத்த தொல்காப்பியர் வழி வந்த தமிழன் என்றுமே சோரம்போக மாட்டன்!

மாறு வேசம் போடுவதி;ல் புகழ் பெற்ற அரேபியாவின் லோரன் ஐசை விட பன் மடங்கு கைதேர்ந்தவர் முனைவர் பிள்ளை. எனவே எப்படியோ எல்லோரையும் கொட்டாவி விட வைத்து விட்டு, கம்பி நீட்டி விட்டார் பெர்லினுக்கு!

அப்போது தான் இந்திய ஒன்றியத்தில், சுகந்திரப் போராட்டங்கள் ஒரு முக்கியமான கட்டத்தை அடைந்து கொண்டிருந்தன. தென் இந்தியாவில் தமிழர்கள் மட்டும் ஆங்கிலேயர்களை எதிர்த்து போராட, வட இந்தியாவில் இந்தி காரர்களும் மனுவாதிகளும் ஆங்கிலேயன் போடும் எலும்பு துண்டுகளை பொருக்கித் தின்றுகொண்டு இருந்தனர்! அப்போது பாஞ்சால் வங்காள வீரர்கள் நடத்திய தீரமான போராட்டங்களுக்கு முனைவர் பிள்ளை, செர்மனியிலிருந்து ரகசியமாக ஆயுதங்களை அனுப்பி உதவி செய்தார்.

தமிழ்நாட்டை ஓர் உணர்வுள்ள தமிழன்தான் ஆள வேண்டும்; இன்று தமிழர்கள் அனைத்தும் இழந்து அதிகாரமற்ற அடிமைகளாக தினமும் தெலுங்கனிடமும் மலயாளியிடமும் கன்னடநிடமும் அடிப்பட்டு செத்துக் கொண்டிருக்கிறான்! எல்லா அதிகாரங்களையும் இழந்துவிட்டு அடிமை உளவியலில் நிம்மதியாக வாழ்கிறான்! இனியுமிது நீடித்தால் தமிழன் அழிவது உறுதி!

அயிலுழவன் கோவன்புதூர்

http://senkettru.com/?p=5559

-senkettru.com