பெர்சே 4 பேரணியில் கலந்து கொண்டதன் மூலம் மகாதிர் வரம்பை மீறிவிட்டார், ஹிஷாம்முடின்

 

HishamforPACமுன்னாள் பிரதமர் மகாதிர் முகமட் நேற்று கோலாலம்பூரில் பெர்சே 4 பேரணியில் காணப்பட்டதன் வழி அவர் வரம்பை மீறிவிட்டார் என்று அம்னோவின் உதவித் தலைவரான ஹிஷாமுடின் ஹுஸ்ஸேன் இன்று கூறினார்.

போலீசாரால் சட்டவிரோதமானது என்று அறிவிக்கப்பட்ட அப்பேரணியில் அம்னோவின் முன்னாள் தலைவர் கலந்து கொண்டது அவர் 1998 ஆம் ஆண்டில் தெருப் போராட்டங்களுக்கு ஆதரவு அளிக்கக்கூடாது என்று கூறியிருந்ததற்கு முரணாக இருக்கிறது என்றார் ஹிஷாமுடின்.

பதவியிலிருந்து ஓய்வு பெற்ற பின்னர் மகாதிர் அவருடை கருத்தைத் தெரிவிப்பதிலிருந்து தடுக்கப்படவில்லை என்று கூறிய ஹிஷாமுடின், எதிரணியினரால் நடத்தப்பட்ட பேரணியில் அவர் இருந்தது ஏற்புடையதல்ல என்றார்.