இலங்கையில் காணாமல்போன தமிழர்களைக் கண்டுபிடிக்கக் கோரி சென்னையில் மாபெரும் ஆர்ப்பாட்டம்

arpadam_chennai_peo-001இலங்கையில் காணாமல் செய்யப்பட்ட தமிழர்களைக் கண்டுபிடிக்க கோரி, சென்னை ஐ.நா. அலுவலகம் முன்பாக மாபெரும் ஆர்ப்பாட்டமொன்று இன்று இடம்பெற்றது.

ஐக்கிய நாடுகள் அவையால் ஆகஸ்ட் 30ம் திகதியன்று சர்வதேச காணாமல் போனோர் நாள் கடைப்பிடிக்கப்படுகிறது.

இதையொட்டி இலங்கையில் போரின் போதும், அதற்கு பின்னரும் காணாமல் போகச் செய்யப்பட்டவர்களை மீட்கக் கோரி சென்னை அடையாறில் உள்ள ஐக்கிய நாடுகள் அவையத்தின் அலுவலகம் முன்பாக தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் தலைவர் பண்ருட்டி தி. வேல்முருகன் தலைமையில் இன்று மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இதில் திராவிடர் விடுதலை கழகத்தின் தலைவர் கொளத்தூர் மணி, தமிழ் தேச விடுதலை இயக்கத்தின் தோழர் தியாகு, நாடு கடந்த தமிழீழ அரசின் தோழமை மையத்தின் பேராசிரியர் சரசுவதி, காஞ்சி மக்கள் மன்றத்தின் மகேஷ் உட்பட ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர்.

முன்னதாக இந்த கோரிக்கையை வலியுறுத்தி ஐ.நா. ஆணைய அலுவலகத்தில் மனு ஒன்றும் கொடுக்கப்பட்டது.

-http://www.tamilwin.com

TAGS: