பிணைக்கைதிகளை உயிருடன் எரித்து கொன்ற ஐ.எஸ். தீவிரவாதிகள்: இரத்தத்தை உறையவைக்கும் வீடியோ வெளியீடு

fire_isisஉளவு பார்த்ததாக குற்றங்சாட்டப்பட்ட ஈராக்கை சேர்ந்த 4 பேரை ஐ.எஸ். தீவிரவாதிகள் உயிருடன் எரித்துகொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஐ.எஸ் தீவிரவாதிகள் தனி இஸ்லாமிய நாடு அமைக்கும் முயற்சியில் பல்வேறு நாச செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர்ன்

மேலும் தங்களிடம் உள்ள கைதிகளை சிறுவர்கள் மூலம் படுகொலை செய்வது மற்றும் கொடூரமான முறையில் கொலை செய்வது போன்ற இழிசெயல்களிலும் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் உளவு பார்த்ததாக குற்றஞ்சாட்டி ஈராக்கை சேர்ந்த 4 கைதிகளை ஐ.எஸ். தீவிரவாதிகள் உயிருடன் எரித்துகொன்ற வீடியோ வெளியாகியுள்ளது.

இந்த வீடியோ ஈராக்கின் அன்பர் பகுதியில் எடுக்கப்பட்டது என்று கூறப்படுகிறது.

அதில் ஆராஞ்சு நிறத்திலான ஆடையணிந்த 4 கைதிகளின் பேச்சுயும் பதிவாகியுள்ளது. பின்னர் அவர்கள் உடலில் பெட்ரோலை ஊற்றி சங்கிலியால் கட்டி தொங்கவிடப்படுகின்றனர்.

சிறிது நேரத்தில் அவர்கள் தொங்கவிடப்பட்ட பகுதியின் அடியில் ஐ.எஸ். தீவிரவாதி ஒருவர் நெருப்பு வைக்கிறார்.

பின்னர் அவர்கள் உயிருடன் எரிந்து சாம்பலாகும் காட்சிகள் அந்த வீடியோவில் இடம்பெற்றுள்ளது.

தற்போது வெளியிடப்பட்டுள்ள இந்த வீடியோ அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாக பலரும் தெரிவித்துள்ளனர்.

-http://world.lankasri.com