அம்னோ, பிஎன் எம்பிகள் நஜிப்புக்கு எதிராக வாக்களிக்க வேண்டும்: மகாதிர் வலியுறுத்து

bacjபிரதமர்  நஜிப்  அப்துல்  ரசாக்குக்கு  எதிராக  நம்பிக்கையில்லா வாக்கெடுப்பு  நடந்தால்  அம்னோ,  பிஎன்  எம்பிகள்    அதை  ஆதரிக்க வேண்டும்  என  முன்னாள்  பிரதமர்  டாக்டர்  மகாதிர்  முகம்மட் கேட்டுக்கொண்டிருக்கிறார்.

“நஜிப்பை  வெளியேற்றுவதால்  பிஎன் விழுந்து  விடாது. பெரும்பான்மை  கொண்ட  கட்சியாக பிஎன்தான்  தொடர்ந்து  இருக்கும்”,என்றவர்  தம் வலைபதிவில்  கூறினார்.

நஜிப்  ஆட்சியில்  உள்ளவரை, பொருளாதாரம்  தொடர்ந்து  பாதிக்கப்படும், ரிங்கிட்  மற்றும்  பங்குகள்  வீழ்ச்சி அடையும், ஜிஎஸ்டி-யால்  வாழ்க்கைச்  செலவினம்  உயரும்,  தேசிய  கடன்  திருப்பிச்  செலுத்த  முடியாத  அளவுக்கு உயரும்,  வேலையின்மை  பெருகும், பில்லியன் கணாக்கான  மக்களின்  பணம்  தவறாகப் பயன்படுத்தப்படும்.

“இதுதான்  மலேசியாவின்  தலைவிதி. காரணம்  நஜிப்”, என்று  மகாதிர்  எச்சரித்தார்.