பெர்சே பேரணி தொடர்பில் மரியாவுக்கும் மேலும் அறுவருக்கும் போலீஸ் அழைப்பாணை

bersuhபோலீசார்,  கடந்த  வாரக்  கடைசியில்  நடந்த  பேரணி   தொடர்பில்  விசாரணை  நடத்துவதற்காக பெர்சே இயக்கக்  குழு  உறுப்பினர்  எழுவரை  அழைத்துள்ளனர்.

அவ் வெழுவரும்  நாளை  புக்கிட்  அமான்  போலீஸ்  தலைமையகத்துக்கு  அழைக்கப்பட்டிருக்கிறார்கள்.  அங்கு  அவர்களிடம்  வாக்குமூலம்  பதிவு  செய்யப்படும்.

தாமும்  இதர  அறுவரும்  விசாரணைக்கு  அழைக்கப்பட்டிருப்பதை  பெர்சே  தலைவர்  மரியா  சின்  அப்துல்லா  உறுதிப்படுத்தினார்.

மரியா  தவிர, விசாரணைக்கு  அழைக்கப்பட்டுள்ள  மற்றவர்கள்  வருமாறு: சராஜுன்  ஹொடா  அப்துல்  ஹசான்,  மஸ்ஜலிசா  ஹம்சா, பர்ஹானா  அப்துல் ஹாலிம்,  பாட்யா  நட்வா  பிக்ரி, மந்திப்  சிங், ஆடம்  அட்லி  அப்துல்  ஹாலிம்.