நஜிப்: மகாதிர் ஒதுங்கிக்கொள்ள வேண்டும்

 

NajiptoMgetoff1மகாதிர் முகமட் இந்நாட்டின் தலைமைத்துவ பொறுப்பில் இருக்கவில்லை, ஆகவே, அவர் தம்மை முன்நிலைப்படுத்திக் கொள்வதிலிருந்து ஒதுங்கிக்கொள்ள வேண்டும் என்று பிரதமர் நஜிப் ரசாக் இன்று கூறினார்.

உலக மூலதன வாணிகச் சந்தைகள் கருத்தரங்கில் முக்கிய உரையாற்றிய நஜிப் ரசாக் இவ்வாறு கூறினார்.

தமக்கு முன்பு பதவியிலிருந்தவர்களில் ஒருவர் தமக்கு எதிராக இவ்வாறு திரும்புவார் என்று தனது கனவுகள் அனைத்தையும் விஞ்சிய கனவில் கூட தோன்றியதில்லை என்று 500 பேராளர்கள் கலந்து கொண்ட அக்கருத்தரங்கில் எவரது பெயரையும் குறிப்பிடாமல் நஜிப் கூறினார்.

அங்கிருந்தவர்கள் வாய்விட்டுச் சிரித்தனர்.