நாஸிர்: மலேசியாவுக்கு எல்லாமே இறக்கம்தான்

 

Pm'sbrothernazirகடந்த சில மாதங்களாக, நாடு அரசியல் நெருக்கடியில் சிக்கிக் கொண்டிருக்கையில் ரிங்கிட் தொடர்ந்து வீழ்ச்சி கண்டு வருகிறது.

புகைமூட்டம் திரும்பி வந்துள்ளது, மலேசிய கால்பந்து குழு 10-0 அடிவாங்கியுள்ள வேளையில், பிரதமர் நஜிப்பும் அவரின் ரிம2.6 பில்லியன் நன்கொடை விவகாரமும் அனைத்துலக ஊழல்-எதிர்ப்பு மாநாட்டில் கலந்து கொண்டுள்ள பேராளர்களின் கவனத்தை ஈர்த்துள்ள முக்கிய விவகாரம் ஆகிவிட்டது.

ஆக, பிரதமரின் சகோதரர், நாஸிர் அப்துல் ரசாக், இவ்விவகாரங்கள் குறித்து தமது ஏமாற்றத்தைத் தெரிவித்திருப்பதில் ஆச்சரியப்படுவதற்கொன்றுமில்லை.

“மலேசியாவுக்கு அனைத்துமே ஒட்டுமொத்தமாக மிக மோசமாகப் போய்க்கொண்டிருந்த ஒரு காலம் எனக்கு ஞாபகமில்லை.

“இதுவே பொழுதுபுலர்வதற்கு முன்பான மிகுந்த இருளாக இருக்கட்டும் என்று பிராத்திக்கிறேன்”, என்று நாஸிர் இன்று அவரது இன்ஸ்டகிரேமில் பதிவு செய்துள்ளார்.

நாஸி அடிக்கடி அவரது கருத்தை நுண்ணயமாக சமூக ஊடக வழி கூறியுள்ளார். ஆனால், இந்த மிக அண்மையப் பதிவு மலேசியாவை பற்றிய அவரது வேதனை மிகுந்த கருத்தாகும்.