செப். 16 பேரணி மலாய்ப் பேரணி அல்ல; அது அரசாங்க-ஆதரவுப் பேரணி

nanசெப்டம்பர்  16-இல்  நடைபெறும்  பேரணி  “மலாய்க்காரர்  மானம்  காக்கும்” பேரணி  அல்ல  என்றும்  அது  நாட்டின்மீது  அன்பு  கொண்டவர்களும்  அரசாங்கத்தை  ஆதரிப்போரும்  கூடும்  பேரணி  எனக்  கூட்டரசுப்  பிரதேச  அமைச்சர் தெங்கு  அட்னான்  தெங்கு  மன்சூர்  கூறினார்.

“இது  மலாய்க்காரர்கள் கூடும்  கூட்டமல்ல.  எல்லா இனங்களையும்  சேர்ந்த  மக்கள்  ஒன்றுகூடுகிறார்கள்.  மற்ற இனத்தவரும்  வந்து  சேர்ந்து  கொள்வார்கள்  என்றே  எண்ணுகிறேன்”, என  அம்னோ  தலைமைச்  செயலாளருமான  தெங்கு  அட்னான்  குறிப்பிட்டார்.

“நாட்டின்மீது  அன்பு  கொண்டவர்கள்  அவர்கள்  சீனர்களோ  மலாய்க்காரர்களோ  இந்தியர்களோ அரசாங்கத்துக்கு  ஆதரவைக்  காட்ட  இதில் கலந்துகொள்ளலாம்.” இன்று  ரெசிடென்சி  ரசாக்மாஸ்  திட்டத்தைத்  தொடக்கிவைத்த  பின்னர்  தெங்கு  அட்னான்  செய்தியாளர்களிடம்  பேசினார்.