மின்னல் எப் எம் வானொலியை – இந்தியன் ஏப்பமாக மாற்றிய குமரன் யார் ? கேற்க நாதி இல்லையா?

contentwriting_1பேசுவதெல்லாம் தமிழ் . பெயர் இந்தியன் எப் எம் மின்னல் ? தமிழன் என்று சொல்லடா தலை நிமிர்ந்து நில்லடா என்று பிதற்றுகிறோம். இந்த கட்டுரையை எழுதும் போது தமிழ் அறவாரியத்தின் தலைவர் பேட்டி மின்னலில் ஒலி ஏறிக்கொண்டு இருக்கிறது . மக்கள நடுவே…. தமிழா தமிழா தமிழா நீ சாதிக்க பிறந்தவன் தானடா என்ற பாடலுடன் தொடங்கியது !

எத்தனை தமிழ் ஆராட்சி மாநாடுகள், தமிழர் விழாக்கள , பொங்கு தமிழ் ஆரவாரங்கள் , தமிழர் பாதுகாப்பு மாநாடுகள், தமிழ் மண்ணாங்கட்டி மாண்புமிகுகள்.இத்தனையையும் ஒரு மின்னல் எப் எம் குமரன் குத்ரிவிட்டார் என்ற தகவல் நமது கண்களை பிதுங்க வைத்துள்ளது. யார் இந்த குமரன்? இவர் தமிழன் இல்லையா?

இன்று 15/9/2015 நம்மை தமிழன் என்றால் யார் என்று ஆய்வுப்பூர்வமாக உணர்த்திய தமிழினத் தலைவன் பெங்களூர் ஐயா பெரியவர் குணா அவர்களுக்கு பிறந்த நாள். அவருக்கு ஒரு தமிழனாக பிறந்த நாள் வாழ்த்துக்கூற வெந்து நிற்கிறேன். அந்த அளவுக்கு மலேசியாவில் தமிழ் துரோகிகள் கூட்டம்.

இலங்கை ரா கூட்டம் இங்கேயும் தமிழுக்கும் தமிழனுக்கும் உளவு பார்க்க வந்து விட்டது போல உணர்கிறேன். கடந்த சில காலமாக ஹாங்காங்கில் அடுத்த தமிழர் பாதுக்கப்பு மாநாடு சம்மதமாக நடந்த பேச்சில் சில தகவல்கள் கிடைத்து தமிழர்களுக்கு கடைசியில் சீனாதான் உதவும் என்ற வியப்பை பெற்றோம்.

தமிழ் மின்னல் எப் எம் இன்று இந்தியன் மின்னல் எப் எம் என்று மாற்றிய மின்னல் குழப்பி குமரனை யாரும் ஏதும் கேற்க முடியாத வக்கற்ற சமுதாய தவளைகளை வைத்து குமுறும் நிலையில் குரைக்க எந்த நாயும் காணோம்.

இடை நிலைப்பளிகளில் தமிழை இழக்கிறோம். மின்னல் எப் எமில் வானொலி தமிழ் அடையாளத்தை இழந்து புதிய இந்தியன் தமிழில் பேசுதாம். ஒரு மொழிக்கும் சொந்தமில்லாத வெறும் 500 ஆண்டுக்கால வரலாற்றைககொண்ட இந்தியன் என்ற நாட்டில் முந்திப்பிறந்த தமிழுக்கும் தமிழனுக்கும் மின்னல் குமரன் புதிய வரலாறு ஒன்றை ஏற்றி வைக்க நாமெல்லாம் ஊமைகளாக இருக்க முடியாது.

இப்படித்தான் பதவிக்கும் புகழுக்கும் பணத்துக்கும் சோரம் போன பல தமிழ் துரோகிகளை தமிழர்கள் சந்தித்து சலிப்பு அடைத்துவிட்டோம்.

தனி ஒரு குமரனுக்கு இப்படி ஒரு தைரியம் வர யார்க காரணம் என்ற ஆய்வில் ….அவர்தான் என்றாகிய விந்தையில் விரக்தி கொண்டுள்ளோம்.

தி எச் ராகவில் தமிழை தொலைத்து அங்கு ஒரு கோட்டான் கூட்டம் எஞ்சொயீ என்கிறது. அஸ்ட்ரோ பெர்னாமா காசு இல்லை என்று திட்ட மிட்ட தமிழ், தமிழர் அழிப்புகளை அரங்கேற்றி விட்டுள்ளது. 524 தமிழ்பள்ளிகளில் தமிழாம். இடை நிலைக்கு வந்ததும் ஆப்பாம்.

நிலவை காட்டி சோறு ஊட்டிய அவ்வை கதை இன்று அரசியல் வேசமிட்டு காக்கை கூட்டங்கள் எங்கள் ஜாதி என்ற பாரதியின் பாடல்கள் எல்லாம் ஏட்டின் காயங்களாக இரவோடு இரவா இந்தியன் மின்னல் எப் எம் என்றாகி விட்டது.

மலேசியாத தமிழர்கள் இந்தியனா ? அப்போது இந்தியாவில் இருந்து வந்த இதரவர்கள் பேசும் மொழிக்கு என்ன வானொலி ? இந்தியாவின் இந்தியன் வரலாறு என்ன? தமிழர்களின் மொழி வரலாறு என்ன ? உலகின் 120 மில்லியன் தமிழர்களின் மொழியில் இந்தியன அல்லது ஹிந்தி, சமஸ்கிருத மொழியிகளின் கலப்பு என்ன? தமிழன் தமிழ்பபடைப்புகள் ஏன் இந்தியனாக சித்தரிக்க வேண்டும் குமரா ?

அவன் இரவில் பெற்றான் சுதந்திரம் இன்னும் விடிய வில்லை என்கிறான் தமிழகத் தமிழன். மலேசியா தமிழனுக்கோ சுதந்திரம் என்பது மொழி, இனம் இந்த இரண்டும் இந்தியன் பெட்டைககோழிக்கு கூட்டிக்கொடுத்த முட்டையாய் அழுகும் நிலைக்கு நீதான் காரணமா?

தமிழ் மொழி அரங்கம் இருண்ட குகையாக கதி இல்லாமல் பலி வாங்கல் நடக்கிறது இதற்கு இப்போது இந்தியன் மின்னலுக்கு நீ ஒரு இடி அமினா ?

உலகில் எத்தைனையோ தமிழினத தலைவர்களின் வரலாறுகளை படித்தோம் . இவரைப்போன்ற தூயத் தமிழ்த தலைவரை எங்கும் காணோம். ஐயா பெரியவர் குணா அவர்களை இந்த நூற்றாண்டின் தமிழனினத தலைவராகவும். தமிழ் மொழி தலைவராக ஐயா மொழி ஞாயிறு தேவ நேயர் பாவணார் அவர்களை தமிழ் மொழிததலைவராகவும் என் தலைவன் மேதகு பிரபாகரனை தமிழீழத் தமிழ் வீரனாக் பார்க்கிறோம்!

இந்த மூவரையும் இந்த நமது தமிழா இனம் ஏனோ அறியாமல், தெரியாமல், புரியாமல் யாருக்கோ விழா எடுக்கும் பேதமையை காண்கிறோம். இந்நாட்டில் தமிழ் எங்கள் உயிர் என்று போராட்டம் நடத்திய தமிழ் வேல் அவர்களை மறந்து விட்டோம். இன்று கண்ணதாசனுக்கும், வாலிக்கும் விஸ்வ நாதனுக்கும் சினிமா நாதம் பாடுகிறீர்கள் .

தமிழ் மின்னல் எப் எம் இன்று இந்தியன் மின்னல் எப் எம் என்று மாற்றிய மின்னல் குழப்பி குமரனை யாரும் ஏதும் கேற்க முடியாத வக்கற்ற சமுதாய தவளைகளை வைத்து குமுறும் நிலையில் எதிர்த்து குரைக்க ஒரு……. காணோம்.
வருவோம் தயாரகுங்கள்.

-தமிழர் குரல் / தமிழர் சங்கம்
பொன் ரங்கன்