விசாரணையாளர்கள் ஆவணங்களை எடுத்துச் சென்று விட்டார்கள் அதனால்தான் உரிய நேரத்தில் தணிக்கை செய்யப்பட்ட கணக்கறிக்கைகளைத் தாக்கல் செய்ய முடியவில்லை என்று 1எம்டிபி காரணம் கூறுவதை அபத்தம் என்கிறார் பெட்டாலிங் ஜெயா உத்தார எம்பி டோனி புவா.
செப்டம்பர் 30க்குள் கணக்குகளைத் தணிக்கை செய்து தாக்கல் செய்யும் எண்ணம் 1எம்டிபிக்குக் கிடையாது என்றும் அதை மூடிமறைக்கவே அது இப்படி ஒரு விளக்கத்தை முன்வைத்துள்ளது என்றாரவர்.
“இது ஒரு நொண்டிச் சாக்கு. பொதுக் கணக்குக்குழு 1எம்டிபி-இன் கணக்காய்வாளர் Deloitte Malaysia-வைச் சந்தித்து விசாரணை நடத்தியபோதே 2015 ஜூன் முடிய, Deloitte கணக்காய்வைச் செய்யுமாறு கேட்டுக்கொள்ளப்படவுமில்லை கணக்காய்வு செய்ய அனுமதிக்கப்படவுமில்லை என்பது தெரிந்து விட்டது.
“அதன் பின்னர் அப்போதைய பிஏசி தலைவர் நூர் ஜஸ்லான் முகம்மட், Deloitte கணக்காய்வைத் தொடங்க நிதி அமைச்சு இன்னும் பணிக்கவில்லை என்று செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
“ஆக, எல்லா ஆவணங்களும் விசாரணையாளர்களிடம் இருப்பதாகக் கூறுவது செப்டம்பர் 30க்குள் கணக்கறிக்கையை வெளியிடும் எண்ணம் 1எம்டிபிக்குக் கிடையாது என்பதை மூடுமறைப்பதற்காக சொல்லப்படும் ஒரு நொண்டிச் சாக்கு”, என புவா இன்று ஓர் அறிக்கையில் கூறினார்.
இதனால் மக்களுக்கு என்ன நன்மை தீமை ப்ரோ.
கனகறிக்கை தாக்கல் செய்தாலும் நாணய வீழ்ச்சி மாற்றம் ஏற்படபோவது இல்லை.செவிடன் காதில் ஊதிய நிலை தான் தற்பொழுதைய நிலைமை.காலத்தை வீணாகாமல் அடுத்த பொதுத்தேர்தலை கவனியுங்கள்.