முன்னாள் சிஎம்-மீது அரச நிந்தனை வழக்கு

thambyசிலாங்கூர்  இளவரசர்  மதம் மாறினார்  எனத்  தம்  முக  நூல்  பக்கத்தில்  பதிவிட்ட  மலாக்கா  முன்னாள்  முதலமைச்சர்  அப்துல்  ரஹிம்  தம்பி  சிக்மீது  அரச  நிந்தனைக்  குற்றம்  சாட்டப்பட்டுள்ளது.

ஷா  ஆலம்  செஷன்ஸ்  நீதிமன்றத்தில்  அரச  நிந்தனைச்  சட்டத்தின் பகுதி 4(1), (சி)இன்கீழ்  குற்றம்  சாட்டப்பட்ட  அப்துல்  ரஹிம்  குற்றச்சாட்டை  மறுத்து  விசாரணை  கோரினார்.

1998 தொடர்பு, பல்லூடகச்  சட்டத்தின்கீழ்  சுமத்தப்பட்ட  மாற்றுக்  குற்றச்சாட்டையும்  அவர்  மறுத்தார்.

அப்துல்  ரஹிமின்  கூற்று  ஆதாரமற்றது  என  சிலாங்கூர்  அரண்மனை  அதை  நிராகரித்தது.