உயர்ந்த சாதி மாணவர்கள் சாப்பிடும் தட்டினை தொட்ட தாழ்ந்த சாதி மாணவன்: கண்மூடித்தனமாக தாக்கிய ஆசிரியர்

caste_beat_001ராஜஸ்தான் மாநிலத்தில் உயர்ந்த சாதி வகுப்பினர் சாப்பிடும் “தட்டினை” தொட்ட தாழ்ந்த சாதி மாணவனை ஆசிரியர் கண்மூடித்தனமாக அடித்துள்ளார்.

ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூர் மாவட்டத்தில் உள்ள அரசு பள்ளியில் 4 ஆம் வகுப்பு படித்து வரும் தினேஷ் மெக்வா(10) என்ற தாழ்ந்த சாதி சிறுவன், மதிய உணவின்போது, அங்கு வைக்கப்பட்டிருந்த தட்டுகளை எடுத்து மற்ற மாணவர்களுக்கு கொடுத்துள்ளான்.

இதனைப்பார்த்த ஆசிரியர், அவனை கூப்பிட்டு கண்டித்ததோடு மட்டுமல்லாமல் மாணவனை கண்மூடித்தனமாக அடித்ததில், உடலில் ரத்தகாயம் ஏற்பட்டுள்ளது.

இதனால் கோபம் கொண்ட மாணவனின் தந்தை, நேராக ஆசிரியர் சவுத்ரி வீட்டுக்கு சென்று எவ்வாறு என் மகனை அடிக்கலாம்? என்று வாக்குவாதம் செய்துள்ளார்.

இந்த வாக்குவாதம் முற்றவே, ஆசிரியர் சவுத்ரி, மாணவனின் தந்தையையும் தாக்குவதற்கு முயற்சிசெய்துள்ளார்.

இதனைத் தொடர்ந்து ஆசிரியர் மீது, மாணவனின் தந்தை பொலிசில் புகார் அளித்துள்ளார்.

-http://www.newindianews.com

TAGS: