நெத்தன்யாகு- நஜிப் கைகுலுக்கல் மீது பாஸின் ஆத்திரம் இன்னும் தீரவில்லை

handபிரதமர்  நஜிப்  அப்துல்  ரசாக்,  தாம்  இஸ்ரேலிய பிரதமர்  பெஞ்சமின்  நெத்தன்யாகுவுடன்  கைகுலுக்கியது  திட்டமிடப்படாத  ஒன்று  என  விளக்கமளித்தாலும்  பாஸின்  ஆத்திரம்  கொஞ்சமும்  குறையவில்லை.

அல்-அக்காசா  பள்ளிவாசல்  தொடர்பில்  இஸ்ரேலுக்கும்  பாலஸ்தீனத்துக்குமிடையில்  சச்சரவு  மூண்டுள்ள  வேளையில்  நஜிப்  சிரித்துக்  கொண்டே நெத்தன்யாகுவின்  கரத்தைப்  பிடித்துக்  குலுக்கியதுதான்  ஆத்திரத்துக்குக்  காரணம்  என  பாஸ் தகவல்  தலைவர்  நஸ்ருடின்  ஹசான்  கூறினார்.

“நண்பர்கள்  போலவும்  எதுவுமே  நடக்காதது  போலவும்  நஜிப்  இஸ்ரேலிய  பிரதமருடன்  கைகுலுக்கியதன்வழி  இஸ்ரேல்மீது  அழுத்தம்  கொடுக்கவும்  அதைப்  புறக்கணிக்கவும்  முயற்சிகளை மேற்கொண்டிருக்கும்  முஸ்லிம்  உலகுக்கு துரோகமிழைத்து  விட்டார்.

“ திட்டமிட்டு  இன ஒழிப்பு  நடவடிக்கையில்  ஈடுப்பட்டிருப்பதாக  இஸ்ரேலைக்  குற்றம்சாட்டி (ஐநா பொதுப்பேரவையில்) அவர்  பேசியது  ஒரு  அரசியல்  தந்திரமே  தவிர  வேறொன்றுமில்லை  என்பதைத்தான்  அந்தக்  கைகுலுக்கல்  காண்பிக்கிறது.

“அது  பாலஸ்தீனர்களின்  அவலத்தை  மலேசியா  சாதாரணமாகக்  கருதுவதைக்  காண்பிக்கிறது  இஸ்ரேலுக்கு  எதிரான  நமது  அதிகாரப்பூர்வ  நிலைப்பாட்டையும்  பலவீனப்படுத்தி  விட்டது”, என்று  அவர்  ஓர்  அறிக்கையில்  கூறினார்.