ஹிஷாமுடின்: அம்னோவில் அந்த எழுவர் யார் என்பது தெரியாது

hishஅம்னோ  உதவித்  தலைவர்  ஹிஷாமுடின்  உசேனுக்கு  அம்னோவில்  ஒழுங்கு  நடவடிக்கைக்கு  ஆளான  எழுவர்  பற்றித்  தெரியவில்லை.

அவர்கள்  யார்  என்று  வினவியதற்கு, “தெரியாது”  எனச்  சுருக்கமாகப்  பதிலிறுத்தார்.

கட்சித்  தலைமைச்  செயலாளர்   தெங்கு  அட்னான்  தெங்கு  மன்சூரிடம் பிரதமர்  நஜிப்  அப்துல்  ரசாக்  பதவி  விலக  வேண்டும்  என்று  கோரிக்கை  விடுத்த  முன்னாள்  பிரதமர்  டாக்டர்  மகாதிர்  முகம்மட்மீது  நடவடிக்கை  எடுக்கப்படுமா  என்று  வினவியதற்கு  அவர்  அம்னோவில்  எழுவர்மீது  ஒழுங்கு  நடவடிக்கை  எடுக்கப்படுவது பற்றிப்  பரிசீலிக்கப்படுவதாகக்  கூறினார்.

கட்சியில்  ஒழுங்கு  நடவடிக்கை  பற்றிப்  பரிசீலிப்பது  வழக்கமான  ஒன்றுதான்  என்று  ஹிஷாமுடின்  தெரிவித்தார்.