குடியிருப்பவர்கள் வெளியேற்றப்படுவதைத் தடுக்க முயன்ற டிஎபி எம்பி கைது செய்யப்பட்டார்

 

DAP mp arrested1நெகிரி செம்பிலான், கம்போங் உலு திமியாங்கில் குடியிருப்பவர்கள் அங்கிருந்து வெளியேற்றப்படுவதைத் தடுக்க முயன்ற சிரம்பான் நாடாளுமன்ற உறுப்பினர் அந்தோனி லோக் மற்றும் திமியாங் சட்டமன்ற உறுப்பினர் இங் சின் சாய் இன்று காலையில் கைது செய்யப்பட்டனர்.

வெளியேற்றப்படும் நடவடிக்கை தொடங்குவதற்கு முன்பாக காலை மணி 8 லிருந்து அக்கம்பத்து மக்கள் எதிர்ப்பு மறியலில் ஈடுபட்டனர். போலீஸ் வாகனங்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டிருந்தன.

போலீசார் தங்களுடைய கடமையைச் செய்வதிலிருந்து தடுக்கப்பட்டதற்காக சுமார் 15 ஆர்ப்பாட்டக்கரர்களை கைது செய்ததாக ஓரியன்டல் டெய்லி கூறிற்று.

இந்த நடவடிக்கையின் போது நூற்றுக்கும் மேற்பட்ட வீடுகள் உடைக்கப்பட்டன.

இன்று காலையில் 15 பேர், இரு டிஎபி மக்கள் பிரதிநிதிகள் உட்பட, கைது செய்யப்பட்டதை சிரம்பான் மாவட்ட போலீஸ் தலைவர் எசிபி முகமட் ஸாக்கி ஹருன் உறுதிப்படுத்தினார்.