அருணகிரிநாதர் மன்றத்தின் வளர்ச்சிக்காக: ஹைதரபாட் சிவா அவர்களின் இன்னிசை நிகழ்ச்சி

arunakiri1அருணகிரிநாதர் மன்றத்தின் ஹைதரபாத் சிவா அவர்களின் இன்னிசை நிகழ்ச்சி

நாளது 10.10.2015 மாலை 6.00 மணி தொடக்கம் மக்கள் தொலைக்காட்சி புகழ் ஹைதரபாட் சிவா அவர்களின் இன்னிசை நிகழ்ச்சி ஈப்போ சுங்கை பாரி வழி மகா மாரியம்மன் ஆலயத்தின் மண்டபத்தில் நடைபெறவுள்ளது.

பொது மக்களின் ஆதரவு நிறைவாக உள்ளது. மேற்படி நிகழ்வுக்கான அழைப்புக்களை வீடு வீடாகச் சென்று வழங்கினோம். எங்களின் முயற்சிக்கு ஈப்போ பாராட் நாடாழுமன்ற உறுப்பினர் மாண்புமிகு மு. குலசேகரன் அழைப்புக் கார்டுகளை விற்றுக் கொடுப்பதில் எங்களுக்கு பேருதவியாக விளங்கினார். அவருக்கு இவ்வேளையில் நன்றியைப் புலப்படுத்திக் கொள்கின்றோம்.

arunakiri2இரவு உணவுடன் நடைபெறும் இந்நிகழ்வுக்கு அழைப்புக் கார்டுகளை மண்டபத்திலும் பெற்றுக் கொள்ளலாம். கட்டணம் இருபது ரிங்கிட் மட்டுமே. அருணகிரிநாதர் மன்றத்தின் வளர்ச்சிக்காக இந்நிகழ்வு நடைபெறவுள்ளது. ஆதரித்து உதவுமாறு பணிவுடன்
வேண்டுகின்றோம்.

தலைநகர் பாலயோகி சுவாமிகளின் ஆசியுரையும் மகப்பேறு வல்லுநர் டாக்டர் வ. ஜெயபாலனின் தலைமையிலும் நிகழ்வு நடைபெறுகிறது. தொடர்புக்கு ஆசிரியர் மணி இரா. மாணிக்கம் 0135014906 செயலாளர் ஈப்போ அருணகிரிநாதர் மன்றம்.