சிறுவனை சிலுவையில் அறைந்த ஐ.எஸ்.தீவிரவாதிகள்: இஸ்லாத்தை தழுவ பெற்றோர் வற்புறுத்தல்

isis_crucify_boy_001சிரியாவின் அலெப்போ பகுதியில் இஸ்லாத்தை தழுவாத கிறிஸ்தவர்களை ஐ.எஸ்.தீவிரவாதிகள் சித்திரவதை செய்து சிலுவையில் அறைந்துள்ளனர்.

அலெப்போ பகுதியில் உள்ள கிறிஸ்தவர்கள் மீது தொடர்ந்து தாக்குதலை நடத்திவரும் ஐ.ஸ்.தீவிரவாதிகள்,

தற்போது அவர்களை இஸ்லாத்தை தழுவ வேண்டும் என வற்புறுத்தி வருகின்றனர்.

இந்நிலையில் அலெப்போ பகுதியில் மதபோதகராக இருப்பவரையும் அவர் குடும்பத்தினரையும் சுற்றிவளைத்த ஐ.எஸ்.தீவிரவாதிகள்,

இஸ்லாம் மதத்தை தழுவ வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர்.

இதற்கு மறுப்பு தெரிவித்த அந்த போதகரின் 12 வயது மகனின் விரல் நுனிகளை துண்டித்து பெற்றோரை கடுமையாக தாக்கவும் செய்துள்ளனர்.

மதபோதகரை பலமுறை தாக்கியும் சித்திரவதை செய்தும் இஸ்லாத்தில் இணைய அவர் மறுப்பு தெரிவித்து வந்தது

ஐ.எஸ்.தீவிரவாதிகளை ஆத்திரம் கொள்ளச் செய்ததாக பார்வையாளர்கள் சிலர் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் மதபோதகரும் அவரது ஊழியர்கள் இரண்டு பேருடன் 12 வயது சிறுவனையும் சித்திரவதைக்கு பின்னர் சிலுவையில் அறைந்துள்ளனர்.

மேலும், இஸ்லாத்தை தழுவ மறுத்த 2 பெண்கள் உள்ளிட்ட மேலும் 8 பேரை தலை துண்டித்து கொலை செய்துள்ளதாக

சிரியாவில் செயல்பட்டு வரும் தொண்டு நிறுவனம் ஒன்று தெரிவித்துள்ளது.

-http://world.lankasri.com