ஹிஷாம்: ஆட்சியாளர்கள் சொல்லாததைச் சொன்னதாகக் கூறாதீர்

sham1எம்டிபி  மீது  ஆட்சியாளர்  மன்றம்  அறிக்கை  வெளியிட்டிருப்பதை  வைத்து  அவர்களுக்கு  பிரதமர்  நஜிப்  அப்துல்  ரசாக்  மீதிருந்த  நம்பிக்கை  போய்விட்டது  என்று  கூறப்படுவதைத்  தற்காப்பு  அமைச்சர் ஹிஷாமுடின்  உசேன்  மறுத்தார்.

“அது (நஜிப்பிடம்  ஆட்சியாளர்கள்  நம்பிக்கை  இழ்ந்தனர்  என்று கூறுவது)  பொறுப்பற்ற  பேச்சு.

“அது  நியாயமல்ல.  ஆட்சியாளர்களுக்குப்  பிரதமர்மீது  நம்பிக்கை  இல்லையென்றால் அதை  நேரடியாகவே  சொல்லி  இருப்பார்கள். 1எம்டிபி  பற்றிக்  குறிப்பிட்டிருக்க  மாட்டார்கள்”, என்றாரவர்.

செவ்வாய்க்கிழமை  ஆட்சியாளர்  மன்றம்  வெளியிட்ட  அறிக்கை  1எம்டிபி  விசாரணையில்  சம்பந்தப்பட்ட  தரப்பினர்  ஒத்துழைக்க  வேண்டும்  என்பதை  வலியுறுத்தியது. ஆட்சியாளர்கள் இப்படி  அறிக்கை  வெளியிடுவது  அரிதாகும்.