800 ஆயுதங்களோடு ஆயுதக் கப்பல் ஒன்றை சிங்கள கடல் படை பிடித்துள்ளது !

SONY DSCஇலங்கை கடல் பரப்பில் இருந்து சுமார் 12 கடல் மைல் தொலைவில் , சர்வதேச எல்லையில் சந்தேகத்திற்கு இடமாக நின்ற சிறியரக கப்பல் ஒன்றை இலங்கை கடல் படையினர் சற்று முன்னர் பிடித்துள்ளார்கள் என்ற செய்தி அதிர்வு இணையத்திற்கு கிடைத்துள்ளது.

குறித்த கப்பலில் சுமார் 800 க்கும் மேற்பட்ட ஆயுதங்கள் இருந்துள்ளது. அத்தோடு கப்பல் மாலுமி ஒரு உக்கிரைன் நாட்டவர் என்றும். அதில் மேலும் சில இலங்கையர்கள் இருந்துள்ளார்கள் என்றும் ஆரம்ப கட்ட விசாரணை ஊடாக தெரியவந்துள்ளது.

இருப்பினும் இவர்கள் சிங்களவர்களா இல்லை தமிழர்களா என்ற விடையத்தை வெளியிட கமாண்டர் ரவீந்த்ர விஜயகுணவர்த்தன மறுத்துவிட்டார்.

இக் கப்பல் இலங்கை கொடியோடு பயணத்தில் ஈடுபட்டு இருந்துள்ளது என்பதும் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. இலங்கை கடல் படையினர் இக் கப்பலை கட்டி இழுத்து காலி துறை முகத்திற்கு கொண்டு வந்துள்ளார்கள் என கொழும்பில் உள்ள அதிர்வின் புலனாய்வுச் செய்தியாளர் மேலும் தெரிவித்துள்ளார்.

-http://www.athirvu.com

TAGS: