ஜமால்: சுல்தான்களின் அறிக்கை எதிரணியினருக்கு எதிராக வெளியிடப்பட்டது

jamalஇன  உணர்வுகளைத்  தூண்டிவிட்டு அரசியல்  ஆதாயம்  தேடுவதைக்  கண்டிக்கும்  சுல்தான்களின்  அறிக்கை  எதிரணியினரைக்  கருத்தில்  கொண்டு  வெளியிடப்பட்டிருக்கிறது  என ‘சிகப்பு  இயக்க’ப்  பேச்சாளர்  ஜமால்  முகம்மட்  யூனுஸ்  இன்று  கூறினார்.

மலேசியாகினியிடம்  பேசிய  ஜமால்,  ஆட்சியாளர்  மன்றத்தின்  அறிக்கையை  ‘சமுதாய  ஒப்பந்தத்தை’யும்  மலாய்க்காரர்  சிறப்புரிமைகளையும்  எதிர்ப்போருக்கு விடுக்கப்பட்ட   எச்சரிக்கை  என்றே  கருதுவதாகக்  கூறினார்.

“பிஎன்னும்  அம்னோவும்  எந்தக்  காலத்திலும்  இன விவகாரங்களைத்  தூண்டிவிட்டது  கிடையாது. பக்கத்தான், எதிரணி,  டிஏபி ஆகியோர்தான்  இன விவகாரங்களைத்  தூண்டி  விட்டு  அம்னோ  மற்றும்  பின்னை  உசுப்பி  விடுவார்கள்”, என்றாரவர்.

“அரசியலில்  விரைவில்  புகழ்பெற  விரும்பும்  சிலர்  இன விவகாரங்களைத்  தூண்டி  விடுகிறார்கள்”, என  ஜமால்  குறிப்பிட்டார்.