செஷன்ஸ் நீதிமன்றம் நேசனல் பீட்லோட் கார்ப்பரேசன் (என்எப்சி) தலைவர் முகம்மட் சாலே இஸ்மாயிலை இரண்டு நம்பிக்கை மோசடி குற்றச்சாட்டிலிருந்து இன்று விடுவித்தது.
என்எப்சி-இன் ரிம9,758,140 நிதியைக் கொண்டு கோலாலும்பூர், பங்சாரில் இரண்டு ஆடம்பர அடுக்கக வீடுகள் வாங்கியதாக அவர்மீது குற்றம் சாட்டப்பட்டிருந்தது. அதில் மோசடி எதுவும் நிகழவில்லை என்று நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளதாக உத்துசான் மலேசியா அறிவித்துள்ளது.
முகம்மட் சாலே அம்னோ மகளிர் தலைவர் ஷரிசாட் அப்துல் ஜாலிலின் கணவராவார்.
என்எப்சி கால்நடை வளர்ப்புத் திட்டத்துக்காக அரசாங்கத்திடமிருந்து கடன் பெற்றிருந்தது.
ஊழலுக்கு விடுதலை. உண்மைக்குத் தண்டனை. ‘Malaysia Boleh’
அம்னோ பொலே.மக்களுக்காக போராடுபவர்களுக்கு தேச நிந்தனை சட்டம்.அம்னோ ஊழல்வாதிகளுக்கு பரிவட்டம். 1 மலேசியா.
இதுதான் மலேசியா நீதி— கம்மனாட்டிகளை நீதிபதிகள் ஆக்கினால் வேறு என்ன நடக்கும்?
இதுதான் சத்து மலேசியா.
எல்லா ஊழல்வதிகளையும் கோடி லட்ச rm திருடனை யும் அரசாங்கம் ஒன்றும் செய்து பசிக்காக TAVA பிஸ்கட் திருடிய குழந்தையை 30 நாள் தடுத்து வைக்கும் அரசாங்கமே நம் அரசாங்கம்
என்எப்சி தலைவர் “கொண்டைக்கு பூ” வாங்கியதை கவன குறைவால் “கொண்டோ” வாங்கியதாக தவறுதலாக குற்ற பதிவு செய்ய பட்டிருக்கலாம்.