பக்கத்தான் ஹராபான் நீண்ட காலம் நிலைத்திருக்காது என்ற பாஸ் ஆராய்ச்சி மையத்தின் கணிப்பு உண்மை நிலவரத்தைப் பிரதிபலிக்கவில்லை என பிகேஆர் உதவித் தலைவர் ரபிஸி ரம்லி சாடினார்.
புதிதாக அமைக்கப்பட்ட அக்கூட்டணி விரைவில் மறைந்தொழியும் என்பதை மறுத்த பாண்டான் எம்பி, அடுத்த ஆண்டில் பொதுக் கொள்கை உடன்பாடு காணப்பட்டதும் பக்கத்தான் ஹராபான் மேலும் வலுவடையும் என்றார்.
“உண்மை நிலவரத்துக்கும் அந்த ஆய்வின் முடிவுக்கும் வெகு தூரம். பக்கத்தான் கடந்த காலத் தவறுகளிலிருந்து பாடம் கற்றுக் கொண்டிருக்கிறது. இப்போது அதை மேலும் வலுப்படுத்தும் உபாயம் கிடைத்திருக்கிறது.
“உண்மை நிலவரம் என்னவென்றால் எங்களுக்கு எதிரே இருப்பது பலவீனமடைந்த அம்னோ. மக்களின் விருப்பமும் மாறி வருகிறது.
“அத்துடன் மக்கள் ஒரு வலுவான எதிரணியின் முக்கியத்துவத்தை உணர்ந்திருக்கிறார்கள் என்பதும் உண்மையாகும்”, என ரபிஸி செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
பக்கத்தான் ரக்யாட் ஆறாண்டுகள் நீடித்தது. ஆனால், பக்கத்தான் அவ்வளவு காலம்கூட நீடித்திருக்காது என்று பாஸ் ஆய்வு மையம் கூறியிருந்தது.
பக்காத்தான் ஹரப்பான் பலவீனமடைந்து வரும் என முன்பே நான் பலமுறை கூறியிருந்தேன். இதற்கு காரணம் சொன்னால் பெரும்பாலோர் நம்பமாட்டார்கள். பாஸ் கட்சியின் ஒரு தலைவரும், டி.எ.பி.யின் இரு தலைவர்களும் பக்காத்தானை உடைக்க பெரும் பாடுபடுகிறார்கள். அவர்கள் தேவையான அளவிற்கு சொத்து சேர்த்துவிட்டனர். இந்த மூவரும் தொலைந்தால்தான் பக்காத்தான் உருப்படும். இதற்கு மாற்று, பாரிசான் என யாரும் நினைத்துவிடாதீர்கள். பக்காத்தனின் இந்த நிலைக்கு காரணமே அந்த நாற்றமெடுத்த பாரிசான் தான்.
அம்னோ உட்பூசலினால் பிளவுபடும் இத்தருணத்தை சாதகமாக பயன் படுத்தி பக்காத்தான் ஹராபானின் வளர்ச்சியை வலுப்படுத்திக் கொள்வதே அரசியல் சாணக்கியம்!!! ஒருமித்த கொள்கைக்கு மாறாக செயல்படும் கட்சியினையோ அல்லது தலைவர்களையோ முளையிலேயே கிள்ளி எறிவது உத்தமம்!!!
உண்மையை சொன்னால் எரியத்தான் செய்யும்
பாகத்தான் 100 PERCENT வில் வின் NEXT ELECTION
அம்னோவின் திருவிளையாடலில் இதுவும் ஒன்று.மக்கள் விழிப்பாக இருப்பது அவசியம்.