அம்னோ ஏஜிஎம்: ஊடகங்களுக்குத் தடை நீக்கப்பட்டது

nanஅம்னோ பொதுக்  கூட்டத்தில்  செய்தி  சேகரிக்க  ஊடகங்களுக்குத்  தடை  போடுவதென்ற  முடிவில் ஒரு  மாற்றம்.

கூட்ட  நிகழ்வு  பற்றிச்  செய்தி  திரட்ட  செய்தியாளர்களுக்குத்  தடை  இருக்காது  என்று  அம்னோ  தலைமைச்  செயலாளர்  தெங்கு  அட்னான்  தெங்கு  மன்சூர்  கூறினார்.

ஆனாலும்,  சில  ஊடகங்களுக்கு  எதிராக  கடுமையான  கட்டுப்பாடுகள் விதிக்கப்படும். குறிப்பாக  நேற்றைய  நிகழ்வில்  செய்தி  சேகரிக்க  அனுமதிக்கப்படாத  ஊடகங்களுக்கு.

மலேசியாகினி  கடந்த  ஆண்டு  அம்னோ  பொதுக்  கூட்டத்துக்குச்  செல்வதற்கு  அனுமதிக்கப்படவில்லை. இவ்வாண்டும்  அது  நுழைவு  அனுமதிக்கு  மனுச்  செய்ய  இயலாது.

அச்செய்தித்தளம்  அம்னோ தலைமையகத்தில்  நடைபெறும்  அம்னோ  உச்சமன்றக்  கூட்டத்துக்குச்  செல்வதும்  தடை  செய்யப்பட்டிருக்கிறது.