ஏஜி: கெவின் சகோதரரின் கூற்று நம்ப முடியாதது

keகெவின்  மொராய்ஸ்  “அரசாங்க  உயர்  அதிகாரி  ஒருவர்மீது”  குற்றப் பத்திரிகை தயாரித்திருக்க  முடியாது  ஏனென்றால்  கொலையுண்ட  அந்த  அரசுத்  தரப்பு  வழக்குரைஞர்  1எம்டிபி  விசாரணையில்  ஈடுபடவே  இல்லை.

“எனவே,  காலஞ்சென்ற  கெவினின்  சகோதரர்  கூறுவது  நம்ப  முடியாதது.  கெவின்  1எம்டிபி  விசாரணையில் எந்தக்  காலத்திலும்  ஈடுபட்டதில்லை”, எனச் சட்டத்துறை  தலைவர்  அபாண்டி  அலி  கூறினார்.

“அவர்  2014  ஜூலை  முற்பகுதியில்  மீண்டும்  ஏஜி  அலுவலகத்துக்கு  இடமாற்றம்  செய்யப்பட்டார் அப்போது  1எம்டிபிமீது  அறிக்கை  எதுவும்  தயாரிக்கப்படவில்லை”, என்றாரவர்.

நேற்று,  கெவின் சகோதரர்  சார்ல்ஸ்  மொராய்ஸ், சரவாக் ரிப்போர்ட் வெளியிட்ட பிரதமர் நஜிப்புக்கு எதிரான குற்றப் பத்திரிக்கையில் கொலை செய்யப்பட்ட அரசு வழக்குரைஞர் அந்தோனி கெவின் மொரெஸ் பெயரின் முதல் எழுத்துகள் இருந்தன என்று  கூறி இருந்தார்.

சக்திமிக்க  தனிப்பட்டவர்கள்மீது  வழக்கு  தொடுக்கும்  பணியில்  ஈடுபட்டிருப்பதாகவும்  கெவின்  தன்னிடம்  தெரிவித்ததாக  சார்ல்ஸ்  கூறிக்  கொண்டார்.