படமெடுத்துக் கொள்வது தேச துரோகச் செயலென்று சொல்ல முடியாது. அதனோடு ஒப்பிடும்போது 1எம்டிபியின் மின் உற்பத்தி நிறுவனமான எட்ரா குளோபல் என்ர்ஜி சென். பெர்ஹாட்டை சீனாவின் ஜெனரல் நியுக்லியர் பவர் கார்ப்பரேசனுக்கு விற்றதுதான் தேச துரோகமாகும் என்கிறார் பிகேஆர் தலைவர் வான் அசிசா வான் இஸ்மாயில்.
“1எம்டிபி-இன் மின் உற்பத்தி நிறுவனத்தை வாங்குவதற்கு உள்ளூர் நிறுவனமான தெனாகா நேசனலுக்கு வாய்ப்பு வழங்கப்படாமல் அது சீன நிறுவனமொன்றுக்கு எப்படி விற்கப்பட்டது என்பதைக் கண்டோம்”, என பிகேஆர் தேசிய மாநாட்டில் கொள்கையுரை ஆற்றியபோது அவர் குறிப்பிட்டார்.
“இதுதான் தேச துரோகம். (சூலு இளவரசியுடன்) ஒரு படமெடுத்துக் கொள்வதல்ல”, என்றாரவர்.
சீனர்கள் அந்நிறுவனத்தை வாங்கியதால் மின் கட்டணம் உயரும் சாத்தியமிருப்பதாக வான் அசிசா குறிப்பிட்டார். இதனால் மக்களின் சுமை கூடும்.
“இவ்விற்பனையின் நோக்கமே 1எம்டிபி-யை மீட்டெடுப்பதுதான்… அந்த வகையில் இது எதிர்மறையான தாக்கத்தையும் மக்களின் நலனையும் புறக்கணிக்கும் ஒரு பொருளாதார துரோகமாகும்”, என்றவர் சாடினார்.
“வேறு எதையெல்லாம் விற்கப் போகிறோம்? அன்பு மலேசியர்களே, தயை செய்து விழித்துக் கொள்ளுங்கள் நிதி அடிப்படையில் 1எம்டிபி-யைத் தூக்கிப் பிடித்து நிறுத்த வேறு எதையெல்லாம் விற்கப் போகிறோம்?”, என்று வான் அசிசா வினவினார்.
மின் உற்பத்தியை சீன நிறுவனத்திற்கு விற்றதன் பின்னணியில் உள்ளூர் சீனர்களின் பங்கும் இருக்குமே! பார்த்துக் கொள்ளுங்கள்! சீனர்கள் உங்களுக்கு வேட்டு வைக்கப் போகிறார்கள்! பாவ புண்ணியம் பார்ப்பதற்கு அவர்கள் தமிழர்கள் அல்லவே!
நஜிப் இஸ்ரலிய பிரதமருடன் அதாவது யூதருடன் கைகுலுக்கியதை ரசிக்கிறார்கள், எதிர்கட்சியனர் சூலு சுல்தானின் உறவுகளுடன் படமெடுத்தால் எதிர்க்கிறார்கள்.
எப்படியே எல்லாவற்றையும் சீனர்களுக்கு விற்கிறார்களே என்று வருத் த படாதிர்கள். ஏனென்றால் நமால் வாங்க முடியாது மலேசியாவை கூட சீனர்கள் வாங்குவார்கள். நமக்கு இருக்க இடம் வேண்டும் அல்லவா அதனால் யார் பின்னால் போகவேண்டும் என்பதை நீங்களே முடிவு செய்யுங்கள்.
படம் எடுத்துகொள்வது குற்றம் என்றால் அந்த சுலு சுல்தான் கொடுத்த டான்ஸ்ரீ டத்தோ பட்டங்களுடன் இங்கு இருக்கும் பல பிரபலங்களின் நிலை என்ன? விளக்குவார்களா ?
இந்த விவகாரத்தை நியாபடுதும் நபர்களை தூக்கி வுள்ளே போடவேண்டும்.நாட்டு பற்று அற்றவர்கள் இல்லை தேவை நாட்டிற்கு,அரசியல் வேறு நாடு வேறு,
நாராயண நாராயண.