ஐ.எஸ் தீவிரவாத இயக்கத்தால் அதிகம் ஈர்க்கப்படும் தென் இந்திய இளைஞர்கள்

isis_001தென் இந்திய மாநிலங்களை சேர்ந்த இளைஞர்கள் ஐ.எஸ் தீவிரவாத இயக்கத்தால் அதிகம் கவரப்பட்டுள்ளனர் என்று மத்திய உள்துறை இணை அமைச்சர் தெரிவித்துள்ளார்.

டெல்லியில் நேற்று தனியார் தொலைக்காட்சி ஒன்றிற்கு மத்திய உள்துறை இணை அமைச்சர் கிரண் ரிஜிஜூ பேட்டியளித்துள்ளார்.

அப்போது, கேரளா, கர்நாடகா, தமிழ்நாடு, தெலுங்கானா, ஆந்திர பிரதேசம் போன்ற தென் இந்திய மாநிலங்களை சேர்ந்த இளைஞர்கள் ஐ.எஸ் தீவிரவாத இயக்கத்தால் அதிகம் கவரப்பட்டுள்ளனர்.

தென் இந்திய முஸ்லீம் இளைஞர்கள்தான் ஐ.எஸ் தீவிரவாத இயக்கத்தால் அதிகம் கவரப்படுவதாக தகவல்கள் வருகின்றன.

ஐ.எஸ் தீவிரவாதிகளால் ஏற்பட்டுள்ள அச்சுறுத்தலை எதிர்கொள்ள இந்தியா தயார் நிலையில் உள்ளது.

ஐ.எஸ் தீவிரவாதிகளால் நமக்கு சில பிரச்சினைகள் உள்ள போதிலும், மேற்கு ஐரோப்பிய நாடுகளை போல அச்சுறுத்தல் நமக்கு இல்லை. இதற்கான பெருமை முஸ்லீம்களையும் சாரும்.

இந்த விவகாரத்தை மதத்தின் கோணத்தில் பார்ப்பதை தவிர்க்க வேண்டும் என்று பேசியுள்ளார்.

-http://www.newindianews.com

TAGS: