வெள்ள நிவாரணத்துக்கு தனுஷ் ரூ.5 லட்சம் நிதி உதவி

nadikarதமிழகத்தில் கடந்த சில தினங்களுக்கு முன் பெய்த கன மழையால் பல இடங்களில் கடும் வெள்ளம் ஏற்பட்டது. குறிப்பாக கடலூர் மாவட்டம் வெள்ளத்தில் மூழ்கியது. மேலும் கன மழையால் சென்னை மற்றும் புறநகர் பகுதிகள் வெள்ளத்தில் மிதந்தன.

இந்த கன மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவும் வகையில் முதலமைச்சர் நிவாரண நிதிக்காக நடிகர் சங்கம் சார்பில் நடிகர், நடிகைகளிடம் நிதி திரட்டி வருகின்றனர்.

இதில் முதலாவதாக சூர்யா, கார்த்தி ஒன்றிணைந்து சிவக்குமார் குடும்பத்தின் சார்பில் ரூபாய் 25 லட்சம் வழங்கியுள்ளனர். நடிகர் சங்க பொதுச்செயலாளர் விஷால் ரூ.10 லட்சம் வழங்கியுள்ளார். இவர்களைத் தொடர்ந்து நடிகர் தனுஷும், தனது சார்பில் முதலமைச்சர் நிவாரண நிதிக்காக ரூ.5 லட்சம் வழங்கியுள்ளார்.

இதற்கான காசோலையை நடிகர் சங்க நிர்வாகிகள் முன்னிலையில் தலைவர் நாசரிடம் வழங்கினார். இந்த தொகை நடிகர் சங்கம் மூலமாக முதலமைச்சர் நிவாரண நிதிக்கு அனுப்பி வைக்கப்படுகிறது.

-http://cinema.maalaimalar.com