ராஜபக்ஷவுக்கு அரசியல் ரீதியாக தண்டனை வழங்கப்பட்டுள்ளதாம்- மத்திய அரசை பற்றி பேசக் கூடாது !

ponம.தி.மு.க. பொது செயலாளர் வைகோ, ஈழ பிரச்சினையில் மத்திய அரசை விமர்சனம் செய்து பேசுவது ஏற்புடையது அல்ல என, இந்திய மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார்.

விருதுநகரில் பொன்.ராதா கிருஷ்ணன் நிருபர்களிடம் கூறியதாவது:–

ம.தி.மு.க. பொது செயலாளர் வைகோ, ஈழ பிரச்சினையில் மத்திய அரசை விமர்சனம் செய்து பேசுவது ஏற்புடையது அல்ல. ஈழ பிரச்சினையில் காங்கிரசும், பா.ஜ.க.வும் ஒன்றுதான் என பேசுகிறார். அதாவது பாலும், விஷமும் ஒன்று என கூறுகிறார். ஈழப் பிரச்சினையில் பா.ஜ. அரசு எடுத்துள்ள நடவடிக்கைகளை பட்டியலிட விரும்புகிறேன். இலங்கை பாராளுமன்றத்தில் ஈழப் பிரச்சினை குறித்து முதல் முதலில் பேசியவர் பிரதமர் மோடிதான். முன்னாள் ஜனாதிபதி ராஜபக்ஷவுக்கு அரசியல் ரீதியாக தண்டனை வழங்கப்பட்டுள்ளது, என அவர் கூறினார்.

-http://www.athirvu.com

TAGS: