சார்ல்ஸ் மொராயிஸின் வழக்குரைஞரை விசாரணைக்கு அழைத்த போலீசுக்குக் கண்டனம்

amerikகட்சிக்காரர்களின்  நடவடிக்கைக்கு  வழக்குரைஞர்களைப்  பொறுப்பாக்கக்  கூடாது  என வழக்குரைஞர்  மன்ற  உறுப்பினர்  ஷியாரெட்சான்  ஜொஹான்  அதிகாரிகளுக்கு  நினைவுறுத்தினார்.

வழக்குரைஞர்  அமெரிக்  சித்து,  அவரின்  கட்சிக்காரர்  சார்ல்ஸ்  மொராய்ஸின்  அறிக்கை  தொடர்பில்  விசாரணைக்கு  அழைக்கப்படுவார்  எனப்  போலீஸ்  படைத்  தலைவர்   காலிட்  அபு  அபு  பக்கார்  கூறியிருப்பதை  அடுத்து  அவர்  இவ்வாறு  கூறினார்.

“இது  ஏற்றுக்கொள்ள  முடியாத  ஒன்று.  அமெரிக்  ஒரு  வழக்குரைஞர்  என்ற  முறையில்தான்  செயல்பட்டிருக்கிறார்”, என  ஷியாரெட்சான்  முகநூலில்  குறிப்பிட்டிருந்தார்.

கட்சிக்காரர்களைப்  பிரதிநிதிக்கிறார்கள்  என்பதற்காக கட்சிக்காரர்களின்  செயல்களுக்கு வழக்குரைஞர்களைப்  பொறுப்பாக்கக்  கூடாது  என்ற  நியதியை  அதிகாரிகள்  மதிக்க  வேண்டும்  என்றவர்  வலியுறுத்தினார்.