இந்தோனேசியப் பயணப் படகு கடலில் மூழ்கியது; 97பேர் காப்பாற்றப்பட்டனர்

ferry

இந்தோனியாவின்  பத்தாம்  தீவிலிருந்து  சிங்கப்பூருக்குச்  சென்று  கொண்டிருந்த  பயணப் படகு  கடலில்  மூழ்கியபோது  அதிலிருந்து  ஏறத்தாழ  100பேர்  காப்பாற்றப்பட்டனர். அப்படகு  கடலில்  மிதந்து  கொண்டிருந்த  ஒரு  பொருளுடன்  மோதியதால்  மூழ்கியதாக  சிங்கப்பூர்  அதிகாரிகள்  தெரிவித்தனர்.

பயணப் படகுச்  சேவையை  நடத்தும்  பத்தாம்பாஸ்ட்  நிறுவனம்  வேறு  இரண்டு பயணப்  படகுகளை அழைத்து  வந்து  90  பயணிகளையும்  7 பணியாளர்களையும்  மீட்டதாக  சிங்கப்பூர்  கடலோர,  துறைமுக  நிர்வாகம்  ஓர்  அறிக்கையில்  கூறியது.

இச்சம்பவம்  நேற்றிரவு 9.45க்கு  நடந்துள்ளது.