நடிகர் சங்கத்தில் குவியும் நிவாரண நிதி!

மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டோருக்கு உதவிடும் வகையில் நடிகர்கள் பலரும் நிவாரண நிதியளித்துள்ளனர்.

தமிழகத்தில் கடந்த சில வாரங்களாக பெய்த பலத்த மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவும் வகையில் முதல்வர் நிவாரண நிதிக்காக நடிகர் சங்கம் சார்பில் நடிகர், நடிகைகளிடம் நிதி திரட்டப்பட்டு வருகிறது. நிவாரண நிதிக்காக நடிகர் சிவகுமார் குடும்பத்தின் சார்பில் (நடிகர்கள் சூர்யா, கார்த்தி) ரூ. 25 லட்சமும், நடிகர் விஷால் சார்பாக ரூ. 10 லட்சமும் வழங்கப்பட்டுள்ளது. நடிகர் தனுஷும் ரூ.5 லட்சம் நிதியுதவி அளித்துள்ளார்.

இதேபோல நடிகர் சிவகார்த்திகேயனும் ரூ. 5 லட்சம் வழங்கியுள்ளார். பிரபு – விக்ரம் பிரபுவும் சத்யராஜ் – சிபிராஜும் முறையே ரூ. 5 லட்சம் மற்றும் ரூ. 2.5 லட்சம் அளித்துள்ளார்கள்.

நடிகர், நடிகைகளிடம் திரட்டப்படும் நிவாரண நிதி முதல்வர் நிவாரண நிதிக்கு விரைவில் வழங்கப்படவுள்ளது.

-http://www.dinamani.com