உள்சண்டையை நிறுத்தி பிஎன் எதிர்ப்பில் கவனம் செலுத்துவீர்: எதிரணியிடம் பாஸ்மா வலியுறுத்து

pasmaபாஸ்மா (Pertubuhan Sejahtera Ummah Malaysia) தலைவர்   பாரோல்ரஸி  ஸவாவி,  எதிரணியினர்  தங்களுக்குள்  அடித்துக்  கொள்வதை  நிறுத்திக்கொண்டு  பிஎன்னை  எதிர்ப்பதில்  கவனம்  செலுத்த வேண்டும்  என்று கேட்டு  கொண்டிருக்கிறார்.

டிஏபி, பிகேஆர்,  பாஸ், பார்டி  அமானா  நெகாரா(அமானா)  ஆகியவை  தங்களுக்குள்  சேற்றைவாரி  வீசிக்  கொள்வது  நேரத்தை  விரயமாக்கும்  செயல் என பாரோல்ரஸி  கூறினார்.

“எதிரணி- ஆதரவு  என்ஜிஓ  என்ற  முறையில்  கவனமெல்லாம் பிஎன்மீதுதான்  இருக்க  வேண்டும்  என  நினைக்கிறோம்.

“பாஸ்  ஒன்றும்  அரசாங்கம்  அல்ல. அது  கிளந்தானில் ஒரு  ஆளும்  கட்சியாக  இருக்கிறது அவ்வளவுதான். ஒருவரை  ஒருவர்  தாக்கிக்  கொள்வது  எதிரணிக்கு  எதிர்மறையான  தாக்கத்தை  உண்டாக்கி விடும்”, என பெங்கலான்  குண்டோர்  சட்டமன்ற  உறுப்பினருமான  பாரோல்ரஸி  கூறினார்.