ஒற்றுமையாக குரல் கொடுப்போம்

sidebar-title-poemsவளர்ந்து வரும் நமது கலைஞர்களின் திறமைகளை வெளிப்படுத்தி அவர்களுக்கு ஊக்கமும் ஆக்கமும் அளிக்க செம்பருத்தி அமைத்துக் கொடுக்கும் கலை சார்ந்த களம் இது.  இப்பகுதியில் உங்களது படைப்புகளும் இடம்பெற வேண்டுமா? இப்பொழுதே எங்களுக்கு எழுதி கருத்தூட்டப் (comment) பகுதியில் பதிவு செய்யவும்.

 

உணவுக்கு அண்டை மாநில நீர் ஆதாரங்கள்,
tamilnaduஅழிவுக்கு அணுவுலைகள் , மீத்தேன், கெயில்,
விழிப்போடு இருந்தாலும் இனப்படுகொலை.
7 நிரபராதிகளும், மீனவரும் கொடுஞ் சிறைகளில்

எனத் தமிழனை நித்தமும் செல்லரிப்பது
போல சிறுச் சிறுக கொலைசெய்யும்
இந்திய அரசு நாம் பெருமை மட்டும் பேச
பரிவட்டம் கட்டிக்கொள்ள அனுமதித்துள்ளதாம்!

உயிரும் , உரிமையும், வாழ்வாதாரமும்,
இயற்கையும், பெருமையும்
ஒன்றில்லாது மற்றவை பயன் தராது.

அனைத்திற்காகவும் தொடர்ந்து
ஒற்றுமையாக குரல் கொடுப்போம், 
தமிழர் நலன் காப்போம்.

தமிழ்நுட்பத் தம்பி கார்த்திக்

TAGS: