பாஸ்-அம்னோ ஒத்துழைப்புக்கு கேவியஸ் வரவேற்பு

kveasமைபிபிபி  தலைவர்  எம். கேவியஸ்,  பாஸும்  அம்னோவும்  ஒத்துழைப்பதை  ஆதரிக்கிறார்.  நாட்டில்  இன  ஒற்றுமைக்கும்  அரசியல்  நிலத்தன்மைக்கும்  பாஸ்-அம்னோ  ஒத்துழைப்பு  தேவை  என்கிறார் அவர்.

அது  ஒற்றுமையை,  குறிப்பாக  மலாய்க்காரரிடையே  ஒற்றுமையை  வலுப்படுத்தி  வருங்காலத்தில்  நாடு  மேலும்  முன்னோக்கிச்  செல்ல  உந்துவிசையாக  விளங்கும்.

“சாத்தியமானால்,  அரசியல்   நிலைத்தன்மையின்  பொருட்டு  பாஸ்,  பிகேஆர் எல்லாமே  ஒன்றுசேர  வேண்டும். மலாய்க்காரர்களே  ஒற்றுமையாக  இல்லை  என்றால்  எதிர்காலத்தில்   அவர்கள்  அரசியல்  அதிகாரத்தை  இழந்து  விடுவாரகள்”, என்று  கேவியஸ்  குறிப்பிட்டார்.

ஒவ்வொரு  இனத்திலும்  ஒற்றுமை  நிலவ  வேண்டும். ஒற்றுமை  இல்லையேல்  நாடு  அரசியல்  குழப்பத்தில்  ஆழ்ந்துவிடும்  என்றார்.