கெடா மந்திரி புசார் அஹ்மட் பாஷா முகம்மட் ஹனிபாவுக்கு உயர்ந்த கல்வித் தகுதி இல்லை எனறாலும் மந்திரி புசார் பதவிக்கு அவரே பொருத்தமானவர். பிரதமர் நஜிப் அப்துல் ரசாக்குடன் நேரடியாக தொடர்புகொண்டு பேசக் கூடியவர் பாஷா என்பதால் கெடாவின் மேம்பாட்டை அவரால் விரைவுபடுத்த முடியும்.
“கெடாவின் மேம்பாட்டுக்கு உதவிகேட்டு பிரதமரிடம் அவரால் நேரடியாக பேச முடியும்”, என பெரித்தா ஹரியானிடம் தெரிவித்த துணைப் பிரதமர் ஜாஹிட் ஹமிடி பாஷாவுக்குக் கல்வித் தகுதி இல்லை என்று குறைசொல்ல வேண்டாம் எனப் பொதுமக்களைக் கேட்டுக்கொண்டார்.
சீனாவின் பெய்ஜிங்குக்கு தம் அதிகாரத்துவ பயணத்தை முடித்துக்கொண்ட பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ஜாஹிட், பாஷா புத்ரா ஜெயாவுடன் நெருக்கமான தொடர்பு வைத்திருப்பதால் இனி அந்த வடக்கத்தி மாநிலத்துக்கு முதலீடுகள் நிறைய செல்வதற்கு வாய்ப்பிருக்கிறது என்றார்.
பாஷா பல ஆண்டுகளாக அரசியலில் இருந்து வருவதைத் துணைப் பிரதமர் சுட்டிக்காட்டினார்.
“அரசியல்வாதிகளைக் கல்வித் தகுதியை வைத்து மட்டும் எடை போடக் கூடாது. மற்ற துறைகளையும் பார்க்க வேண்டும்.
“ஏளனம் செய்வதையும் மட்டம் தட்டுவதையும் நிறுத்துங்கள். அவருக்கு ஒரு வாய்ப்பு கொடுங்கள். குறைகளை மட்டுமே பார்த்துக் கொண்டிருந்தால் உண்மையைக் காண முடியாது”, என்றார்.
பாஷாவுக்கு எல்லா தகுதிகளும் உண்டு. மகாதிமிர் மகனுக்கே ஆப்பு வைத்துவிட்டார் என்றால், அரசியலில் வேறு என்னதான் தகுதி வேண்டும்?
யார் வந்தாலும் கடாரம் கண்ட தமிழனின் பரம்பரை தானே .வாழ்துக்கள் பாட்சா பாய் ,
துணைப்பிரதமரா கொக்கா? இப்ப எல்லாம் இன்னாருக்கு என்ன தகுதினு யாரும் கேட்க கூடாது. இந்த நாட்டு அரசியலமைப்பு சட்டத்தையும் மீறி, ஒரு இந்தோனிசியா காரன் இந்நாட்டு துணைப்பிரதமர், அடுத்து இந்த நாட்டுக்கே அவர்தான் பிரதமர் , அப்படி இருக்க, எந்த சட்டத்திலும் இல்லாத கல்வியைப் பற்றி அம்னோ கிட்ட கேள்வி எழுப்ப முடியுமா? துணை பிரதமருக்கு ஒரு வேண்டுகோள் சுப்பிரமணியத்தை விட ரோஸ்மா பிரதமருக்கு ரொம்பவே நெருக்கம், அவர ம.இ.கா தலைவரா ஆகிட்டா, எங்க ஆளுங்க நிறைய பேருக்கு நன்கொடையில பங்கு கிடைக்குமே, நாங்க கேட்க மாட்டோம் நீங்களா பார்த்து இரண்டு செனட்டர் இல்ல டத்தோ பட்டம் கொடுக்கிறதா சொன்ன போதும் அம்மா தலைவராக இந்தியா காரன் எதிர்ப்பு காட்ட மாட்டா? எப்படி வசதி.
தகுதி தேவை இல்லை இந்த நாட்டில். எந்த மடையனும் பிரதமனை சப்பிகொண்டிருந்தால் எல்லாம் நடக்கும். எந்த நிலைக்கும் தாவலாம்– இதனால் தான் இந்த நாடு இந்த நிலையில் ஊசலாடிக்கொண்டிருக்கிறது. என்றுதான் இந்த ஈன ஜென்மங்களுக்கு தகுதி திறன் தேவை என்று புரிகிறதோ அன்றுதான் விடிவு. இதை எல்லாம் ஆரம்பித்து வைத்தவனே இந்த காகா திமிர் தான். அரை குறை அரை வேக்காடு மலாய்க்காரன் தான் உயர் பதவியில் இருக்கு வேண்டும் என்று ஆரம்பித்து வைத்தவனே இந்த காகாதிர்மிர் தான். அதனால் தான் இன்றைய பொழுது மலாய்காரன் அல்லாதவருக்கு உயர் பதவிகள் இல்லை—1982ல் இவன் இதை ஆரம்பித்தான்.
அட …. படிப்பு இருந்தால் என்ன …. இல்லாவிட்டால் என்ன ….. தலைமை 2ம் 2ம் 5 என்றால் சரி என தலை ஆட்ட படிப்பா முக்கியம் ? இதை நன்றாக புரிந்து கொண்டவர்கள் மஇ கா தலைகள் தான் ….. அதனால்தான் மந்திரி பதவி பட்டம் எல்லாம் .
அட படிப்பு ஒரு பெரிய குறையா என்ன ?
எல்லாமே “நன்கொடை”குத்தானே !
படிக்காத மேதை.
அவர் தூங்கியதை பார்த்தீர்களா.
என்னதான் நடக்கு நடக்கட்டுமே ,
திருட்டு பயலுக்கு துணை போக srp போதும் !
இவனுக்கு ………..MIC யைவிட ஒரு படி அதிகமாக பட்டம் வாங்கிய பட்டம் வைத்திருப்பான் போலும்