கிராமத்து பள்ளியில் தமிழ் ஆசிரியராக இருக்கிறார் ராஜ். இவரை குடிப்பழக்கம் இல்லாத நபர் என்று ஊரே போற்றுகிறது. மேலும் இவர் மீது மரியாதையும் வைத்திருக்கிறார்கள்.
ஆனால் இவரோ, இரவில் யாருக்கும் தெரியாமல் குடிக்கிறார். சிறு வயதில் இருந்தே இந்த குடிப்பழக்கம் இருக்கும் இவரால் தினமும் குடிக்காமல் இருக்க முடியவில்லை.
அதே ஊரில் தந்தையின் குடியால் குடும்பத்தை இழந்த நாயகி, குடிப்பழக்கம் இல்லாத நபரை திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்ற லட்சியத்தோடு இருக்கிறார். இவருக்கும், ராஜூவுக்கும் ஒரு மோதலில் பழக்கம் ஏற்படுகிறது.
இந்த பழக்கம் நாளடைவில் இவர்களுக்குள் காதலாக மாறுகிறது. காதலித்த உடனே ராஜூவிடம் உங்களுக்கு குடிப்பழக்கம் இருக்கிறதா? என்று நாயகி கேட்க, அதற்கு விரைவில் குடிப்பழக்கத்தை விட்டுவிடலாம் என்ற எண்ணத்தில் குடிப்பழக்கம் இல்லை என்று கூறி திருமணம் செய்து கொள்கிறார்.
திருமணம் முடிந்து முதல் இரவில் ராஜுவுக்கு குடிப்பழக்கம் இருப்பது நாயகிக்கு தெரிய வருகிறது. அன்று முதல் அவர்களுக்குள் பிரச்சனை ஏற்பட ஆரம்பிக்கிறது.
இறுதியில், இவர்களுக்குள் இருக்கும் பிரச்சினையை ராஜ் சமாளித்தாரா? பிரச்சினைக்கு காரணமாக இருக்கும் குடிப்பழக்கத்தை ராஜ் விட்டாரா? என்பதே மீதிக்கதை.
படத்தில் நாயகன் ராஜ் ஆசிரியராக இருந்தாலும், படம் முழுக்க அப்பாவியாக நடித்திருக்கிறார். இவருடைய நடிப்பு ரசிக்கும் படியாக இருக்கிறது. குடிப்பழக்கத்தை கைவிட இவர் எடுக்கும் முயற்சிகள் கலகலப்பு.
ஆசிரியையாக நடித்திருக்கும் நாயகி, தன்னுடைய கதாபாத்திரத்தை உணர்ந்து நடிக்க தவறியிருக்கிறார். இவருடைய முகபாவனைகளும், பேசும் வசனங்களும் பொருந்தாமல் இருக்கிறது.
பள்ளி பியூனாக நடித்திருக்கும் காந்தராஜ், குடிப்பழக்கத்தால் இவர் படும்பாடு திரையில் பார்ப்பவர்களை ரசிக்க வைத்திருக்கிறது.
காமெடி கதாபாத்திரம் ஏற்று தன்னால் முடிந்தவரை நடித்து ரசிகர்களை சிரிக்க வைத்திருக்கிறார். மற்ற கதாபாத்திரங்கள் கொடுத்த வேலையை சிறப்பாக செய்திருக்கிறார்கள்.
நாட்டில் குடிப்பழக்கம் அதிகரித்து வருகிறது. குடிப்பழக்கத்தால் ஏற்படும் பிரச்சனைகள், அதனால் இளைஞர்களுக்கு ஏற்படும் பாதிப்புக்கள் என சமூக விழிப்புணர்வோடு படத்தை இயக்கியிருக்கிறார் இயக்குனர் செந்தில் ராஜா.
குறிப்பாக குடிப்பழக்கம் உள்ளவர்கள் எத்தனை வகைப்படுவார்கள் என்பதை பிரித்து காண்பித்து ரசிக்கும்படி செய்திருக்கிறார்.
சிவசுப்பிரமணியன் இசையில் பாடல்கள் சுமார் ரகம். புன்னகை வெங்கடேஷ் ஒளிப்பதிவில் கூடுதல் கவனம் செலுத்தியிருக்கலாம்.
மொத்தத்தில் ‘நாளை முதல் குடிக்க மாட்டேன்’ கடைபிடிக்க வேண்டும்.
-http://tamilcinema.news
‘நாளை முதல் குடிக்க மாட்டேன்’ என்ற படத்தின் நாயகி சசிரேகாவை, கள்ளக்காதலியுடன் சேர்ந்து கழுத்தை அறுத்து கொன்ற வில்லன் நடிகர்!
சென்னை: சினிமாவில் கதாநாயகியின் கழுத்தை தனியாக அறுத்து கொலை செய்வதைப் போல தன்னுடைய மனைவியும் ‘நாளை முதல் குடிக்க மாட்டேன்’ என்ற படத்தின் நாயகியுமான சசிரேகாவை, கள்ளக்காதலியுடன் சேர்ந்து கழுத்தை அறுத்து குப்பை தொட்டியில் வீசியுள்ளார் வில்லன் நடிகர் ஒருவர்.
கள்ளக்காதலை கண்டித்ததற்காக இந்த கொடூரத்தை அரங்கேற்றியுள்ளான் அந்த வில்லன் நடிகர். நாளை முதல் குடிக்க மாட்டேன் என்ற படம் நேற்று முதல் தமிழகமெங்கும் வெளியானது. இதில் கதாநாயகியாக நடித்தவர் சசிரேகா. இப்படத்தின் விழா சமீபத்தில் நடைபெற்றது. இந்த விழாவில் நடிகை கலந்து கொள்ளவில்லை. ஏன் வரவில்லை என்று கேட்டதற்கு நடிகை சசிரேகா, வெளிநாடு சென்றிருப்பதாக படக்குழுவினர் தெரிவித்திருந்தனர். மேலும் படக்குழுவினரின் பட்டியலில் கூட நடிகையின் பெயரை குறிப்பிடாமல் இருந்தனர். இப்படத்தின் டிரைலரில் சசிரேகா சம்பந்தப்பட்ட காட்சிகள் இல்லாமல் இருக்கிறது.
கடந்த ஜனவரி சென்னை ராமாபுரம் அருகே 5ம்தேதி தலை துண்டிக்கப்பட்ட நிலையில் இளம்பெண் ஒருவரின் உடல் கிடந்தது. இதுபற்றி ராயலநகர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். கொலை செய்யப்பட்ட பெண்ணை பற்றி எந்தவித தகவலும் தெரியாமலேயே இருந்தது.
இதனால் இந்த வழக்கை சவாலாக எடுத்து தி.நகர் துணை கமிஷனர் சரவணன் தலைமையிலான தனிப்படை போலீசார் கடந்த ஒரு மாதத்துக்கும் மேலாக துப்பு துலக்கினர். சென்னை மற்றும் அதன் சுற்றியுள்ள பகுதிகளில் காணாமல் போனவர்கள் யார்? என்பது பற்றி விசாரணை நடத்தினர். கொலையுண்ட பெண் சினிமா நடிகை போன்ற தோற்றத்தில் இருந்ததால், அது சம்பந்தமான விசாரணையில் போலீசார் இறங்கினர்.
அப்போது ‘நாளை முதல் குடிக்க மாட்டேன்’ என்ற படத்தில் ஹீரோயினாக நடித்த சசிரேகா கடந்த 2 மாதங்களாக காணாமல் போய் இருப்பது தெரியவந்தது. இதை தொடர்ந்து அவர், சினிமா வட்டாரத்தில் யார்-யாருடன் தொடர்பில் இருந்தார் என்பது பற்றி விசாரணை நடத்தப்பட்டது. அப்போது சசிரேகா கதாநாயகியாக நடித்திருக்கும் நாளை முதல் குடிக்க மாட்டேன் படத்தில் வில்லனாக நடித்திருக்கும் ரமேஷ் சங்கர் என்பவரும், சசிரேகாவும் கணவன்-மனைவி என்பது தெரிய வந்தது. இருவரும் போரூர் அருகே உள்ள மதனந்தபுரத்தில் வசித்து வந்ததும் அவர்களுடன் லக்கியா என்ற பெண்ணும் தங்கி இருந்ததும் தெரியவந்தது.
இவரை ரமேஷ்சங்கர் தனது தங்கை மாதிரி என்று சசிரேகாவிடம் அறிமுகப்படுத்தியுள்ளார். இதுபோன்ற தகவல்களை திரட்டியதும் மதனந்த புரத்தில் உள்ள வீட்டுக்கு போலீசார் சென்றனர். ஆனால் ரமேஷ்சங்கர் அந்த வீட்டை காலி செய்து விட்டு லக்கியாவுடன் தப்பிச் சென்றிருப்பது தெரியவந்தது. இதனால் ரமேஷ்சங்கர் மீதான சந்தேகம் வலுத்தது. இதையடுத்து சசிரேகாவின் செல்போன் மற்றும் ரமேஷ் சங்கரின் செல்போன் சிக்னல் ஆகியவற்றை போலீசார் பரிசோதித்து பார்த்தனர்.
அப்போது, கடந்த மாதம் 4ம் தேதி அன்று இருவரது செல்போன் சிக்னல்களும், ஒரே பகுதியை காட்டியது. போரூர் மதனந்தபுரம் வீட்டில் இருந்து சசிரேகா பிணமாக கிடந்த ராமாபுரம் வரையில் 2 பேரின் செல்போன்களும் ஒரே நேர் கோட்டில் சென்றிருப்பது உறுதியானது. இதை தொடர்ந்தே ரமேஷ் சங்கர் தான் சசிரேகாவை கொலை செய்திருக்க வேண்டும் என்ற முடிவுக்கு போலீசார் வந்தனர்.
கள்ளக்காதலுக்கு எதிர்ப்பு இதையடுத்து சோழிங்கநல்லூரில் அடுக்குமாடி குடியிருப்பில் தங்கியிருந்த ரமேஷ் சங்கரையும், லக்கியாவையும் தனிப்படை போலீசார் கைது செய்தனர். போலீசார் நடத்திய விசாரணையில், தங்கை என்கிற போர்வையில் ரமேஷ்சங்கருடன் வசித்து வந்த லக்கியா, அவரது கள்ளக்காதலி என்பது தெரியவந்தது. போரூர் மதனந்தபுரத்தில் உள்ள வீட்டில் ரமேஷ்சங்கர், சசிரேகா, லக்கியா ஆகிய 3 பேருமே ஒன்றாக வசித்துள்ளனர். அப்போது லக்கியாவுடனான கள்ளக்காதலை சசிரேகா கண்டித்துள்ளார்.
கழுத்தை அறுத்து கொலை
இதனால் ஆத்திரம் அடைந்த ரமேஷ்சங்கரும், லக்கியாவும் சேர்ந்து சசிரேகாவை கொலை செய்து பின்னர் கொடூரமாக கழுத்தை துண்டித்துள்ளனர். இதன்பின்னர் போலீசாரை திசை திருப்புவதற்காக அவரது ஆடைகளை கிழித்து எரிந்து விருகம்பாக்கம் பகுதியில் கால்வாயில் தலையை வீசிவிட்டு உடலை ராமாபுரத்தில் போட்டு விட்டு தப்பிச் சென்ற திடுக்கிடும் தகவலும் வெளியாகி உள்ளது.
சினிமாவில் வாய்ப்பு
கொலையுண்ட சசிரேகாவுக்கு ஏற்கனவே திருமணமாகி 8 வயதில் ரோஷன் என்ற மகன் உள்ளான். கணவரை பிரிந்து வாழ்ந்த சசிரேகா சினிமாவில் பெரிய ஆளாக வேண்டும் என்று ஆசைப்பட்டார். அப்போதுதான் ரமேஷ் சங்கரின் அறிமுகம் கிடைத்துள்ளது. இதன் பின்னரே நாளை முதல் குடிக்க மாட்டேன் படத்தில் நடிக்க அவருக்கு வாய்ப்பு கிடைத்துள்ளது. அதுவே இப்போது எமனாகி சசிரேகாவின் உயிரையும் பறித்துள்ளது.
6 மாதத்திற்கு முன்னரே புகார் ரமேஷ்சங்கரால் கடுமையாக பாதிக்கப்பட்டிருந்த சசிரேகா, கடந்த 6 மாதத்துக்கு முன்னர் (செப்டம்பர் மாதம்) மடிப்பாக்கம் போலீசில் புகார் செய்துள்ளார். அப்போது தனது மகன் ரோஷனை கடத்தி வைத்துக்கொண்டு ரூ.6 லட்சம் கேட்டு மிரட்டுவதாக குறிப்பிட்டுள்ளார்.
இந்த புகார் மீது மடிப்பாக்கம் போலீசார் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்றும் அவர் பேட்டி அளித்திருந்தார். அப்போது ரமேஷ்சங்கர் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. அதே நேரத்தில், சசிரேகா கொலையில் குற்றவாளியாக சேர்க்கப்பட்டிருக்கும் லக்கியாவை பலரிடம் காண்பித்து ரமேஷ்சங்கர் லட்சக்கணக்கில் பணவசூல் செய்திருப்பதாகவும் போலீசார் தெரிவித்தனர்.
சென்ற மாதம் சென்னையில் இருந்தேன். மாலை மணி ஆறு. மெரினா பீச்சிற்கு செல்லவேண்டி ஹோட்டலை விட்டு வெளியேறி, நானும் நண்பரும் ஆட்டோவில் ஏறி, கடற்கரைக்கு சென்றுக் கொண்டிருந்தோம். போகும் வழியில் சாலையோரத்தில் பெரும் கூட்டம் கூடியிருந்தது. பதறிப்போன நான், ஆக்சிடெண்டா (Accident ] என ஆட்டோ ஓட்டுனரை கேட்டேன். அதற்கு அவர், “இல்லை சார், சிக்ஸ் டைம் ஆனா, வைன் ஷாப் ஓப்பன் பண்ணிடுவா, அதான் இந்த கியூ”. என்றார். இந்த குடிக்கார பயல்களையாவது திருத்துவதாவது!
ஐயா சிங்கம் ! குடிக்கார பயல்களையாவது திருத்துவதாவது! // அதான் அரசாங்கமே ”டாஸ்மாக்” கடையை திறந்து வைத்து இருக்கிறது ! திருட்டு திராவிடம் !
அவர்கள் திருந்துவது இருக்கட்டும்
மலேசியாவில் இருக்கும் குடிக்கார பயல்களையாவது திருத்துங்கள்
தமிழன் சீனன் மலாய் இனத்தவன் குடிக்கு பேரு போன இனம் இவனுங்க குடி இல்லையேல் அம்பேல் ஆனால் சமீப காலத்தில் இரவு விடுதிகளில் மலாய் பெண்கள் தம் பயங்கர கேவலாமாக தண்ணி அடிப்பதை பார்க்க முடிகிறது
ஐயா sagon மலாயப்பெண்கள் குடிப்பது அவர்களின் தனிப்பட்ட விருப்பம்.நாம் மூக்கை நுழைக்காமல் இருப்பதே நலம். இது எனது தாழ்மையான கருத்து. நம் குடிமகன்கள் பண்ணும் அநியாயம் தான் நம்முடைய சுய மரியாதையை பாதிக்கின்றது. ஆதலின் நம்மால் ஏதாவது செய்ய முடியுமானால் வரவேற்கலாம்.
ஆனைவருக்கும் வணக்கம் ,சார் இங்கே மலேசியாவில் ஒரு 20 வயது ஆனா பையன் இயக்கிய வீடியோ பாடல் மிக அருமையாக செய்து உள்ளன். இங்கே தமிழ் பாடல்களில் இப்படி ஒரு நவீன தொழில்நுட்பம் இதுவரை இவ்வளவு அருமையாக யாரும் பயன் padutiyatu இல்லை என்பது பலரின் கருது .தயவு செய்து அந்த வீடியோ படலை முழுவதுமாக பார்த்து விட்டு .பிறருக்கும் அதன் லின்க்கை பிறரிடம் பகிருமாறு அன்புடன் வேண்டுகிறேன் .அவருடைய அண்ட கிரபுக்ஸ் பார்த்து ஐ படத்தில் கிராப்பிக்ஸ் வேலை பார்த்த ” வெட்டா ” நிறுவனதில் உள்ளவர்கள் குடபார்த்து பாராட்டி வாழ்துக்கள் சொல்லி உள்ளனர் .அனால் ஒரு நாளிதலுக்கு அனுப்பி பயன் இல்லை . கண்ண்டும் கொள்ள வில்லை . .நாள் இதழ்களில் இளைஞர்கள் முன்னுக்கு வர வேண்ண்டும் என்று எழுகிறார்கள் .உண்மையில் பார்க்க பொன்பால் அப்படி ஏதும் இல்லை. ஊருக்கு மட்டும் உபதேசம் ..இன்ட பையன் நீலாய் தம செமாரகை சேர்ந்த பயன் .(malaysia )….அதன் லிங்க்.
ஆனைவருக்கும் வணக்கம் ,சார் இங்கே மலேசியாவில் ஒரு 20 வயது ஆனா பையன் இயக்கிய வீடியோ பாடல் மிக அருமையாக செய்து உள்ளன். இங்கே தமிழ் பாடல்களில் இப்படி ஒரு நவீன தொழில்நுட்பம் இதுவரை இவ்வளவு அருமையாக யாரும் பயன் padutiyatu இல்லை என்பது பலரின் கருது .தயவு செய்து அந்த வீடியோ படலை முழுவதுமாக பார்த்து விட்டு .பிறருக்கும் அதன் லின்க்கை பிறரிடம் பகிருமாறு அன்புடன் வேண்டுகிறேன் .அவருடைய அண்ட கிரபுக்ஸ் பார்த்து ஐ படத்தில் கிராப்பிக்ஸ் வேலை பார்த்த ” வெட்டா ” நிறுவனதில் உள்ளவர்கள் குடபார்த்து பாராட்டி வாழ்துக்கள் சொல்லி உள்ளனர் .அனால் ஒரு நாளிதலுக்கு அனுப்பி பயன் இல்லை . கண்ண்டும் கொள்ள வில்லை . .நாள் இதழ்களில் இளைஞர்கள் முன்னுக்கு வர வேண்ண்டும் என்று எழுகிறார்கள் .உண்மையில் பார்க்க பொன்பால் அப்படி ஏதும் இல்லை. ஊருக்கு மட்டும் உபதேசம் ..இன்ட பையன் நீலாய் தம செமாரகை சேர்ந்த பயன் .(malaysia )….
#விசாரணை
ஆம் விசாரணை என்ற பெயரில் நடக்கும் காவல்துறையின் இயலாமையை விளக்கும் திரைக்காவியம் தான் இது..
பல எண்கவுண்டர்களின் பின்னணி என்னவாக இருக்ககூடும் என்று யூகிக்கமுடிகின்றது.
சில நூற்றாண்டுக்கு முன் இஸ்லாமிய மதத்தை தழுவிய தமிழனின் வாரிசுகள்,
இன்று ஐ எஸ் அமைப்பா அல்கொய்தா வா என்றும்,
மதம் மாற சூழ்நிலையில் இருந்த தமிழனை எல் டி டி யா என்று கேட்கும் மனபான்மை நாடான இந்திய வல்லாதிக்கமே
உலக பயங்கரவாதம் என்பதனை
#நிருபிக்கிறது,
#நினைவூட்டுகிறது,
பல உயிர் தியாகங்கள்,
பல மான போராட்டங்கள்,
பல தலைவர்களின் வாழ்க்கை
அர்பணிப்பு சுதந்திர போராட்டத்தின் விளைவாக அகன்ற,
ஆங்கிலேய ஆட்சியும்,
தோன்றிய இந்தியா என்ற நாடும் இன்றுவரை என்னவாக இருக்கிறது
என்பதனை மனதை உறைய வைக்ககிறது பிழைப்பு தேடு செல்வோரின் அவலங்கள் நிறைந்த காட்சிகள்,
#அதிகாரம் உடையோர் நினைத்தால் என்னவேண்டுமானாலும்,
ஓர் தனி மனிதனை பற்றி உருவாக்கவும்,
அழித்துவிடவும் முடியும் என்பதனை இதயத்தை தைத்தாற்போல் ஓலமிடுகிறது…
#விசாரணை..
ஒவ்வொரு காவல்நிலையத்திலும்,
என்ன நடக்கிறது என்பதனை
சிசிடிவி கேமிராவில் பதிவாக வேண்டியதும்,
அதனை கண்காணிக்க வேண்டியதும் அரசின் கடமையே..
அன்று வெள்ளையன்,
இன்று கொள்ளையனா..?
மக்கள் கொதித்தெழுந்து மாயைநாடு ஒழிக்கபட வேண்டும்,
என்பதனை சொல்லாமல் கதறுகிறது,
திரைபடத்தின் வசனங்கள்…!
தேவையா இனி #சர்வதிகார காவல்துறை #விசாரணை..?
தேவைகள் ஒன்றே,
அது #நிதியற்ற #நீதி #விசாரணை
#மட்டுமே….!
எந்த ஓர் வழக்காயினும்…
ராஜ்குமார்
அருமையான படைப்பு…அதிகார பேயிகளிடம் சாதாரன மக்கள்ப்படும்பாடு …உண்மை கதை https://youtu.be/FN6qS3thO-A