‘மலேசியாவைக் குணப்படுத்தும்’ போராட்டத்தைத் தொடர்வேன்: முகைதின் சூளுரை

pledgeஅம்னோ  துணைத்  தலைவர்  முகைதின்  யாசின்  “உண்மையை” நிலைநிறுத்தும்  போராட்டதைக்  கைவிடப்போவதில்லை  என்றும்  மலேசியா  தோற்றுப்போன  நாடாக  மாறுவதைத்  தடுக்கப்போவதாகவும்  அறிவித்துள்ளார்..

“ஒரு  போராட்டம்  தொடங்குகிறது.  இது  மலேசியாவைக்  குணப்படுத்தும்  போராட்டம்.  மலேசியாவைச்  சிறந்த  நாடாக்கும்  போராட்டம்”, என்று  முகைதின்  நேற்று  அவரது  முகநூல்  பக்கத்தில்  கூறியிருந்தார்.

“வாழ்க்கை  என்றால்  கொள்கைகள்  வேண்டும். உண்மையின்  பக்கம்  நிற்பதே  முக்கிய  கொள்கையாகும்.

“பொய்யைப்  பாதுகாக்கக்  கூடாது. நம்  சமயமும்  இதைத்தான்  வலியுறுத்துகிறது”, என்றாரவர்.